districts

img

வாழைத்தோப்புக்குள் நுழைந்த காட்டு யானை கூட்டம் வாழைகள் முறிந்து சேதம் – விவசாயி கவலை

கோவை, ஜூன் 12–  மேட்டுப்பாளையத்தை அடுத்த தோலாம்பாளையம் பகுதியில் வாழைத்தோப்புக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் வாழைகளை சேதப்ப டுத்தியது. கோவை, மேற்குதொடர்ச்சி மலை யொட்டிய வனப்பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவது தொடர் கதையாக உள்ளது. வனப்பகுதியில் வறட்சி காரணமா கவும், உணவுத்தேவைகளுக்காகவும் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் கிரா மங்களுக்குள் புகுந்து, குடியிருப்பு கள் மற்றும் விவசாய நிலத்தை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக வெள்ளியங்காடு, தோலாம்பாளை யம், பில்லூர் பகுதிகளில் காட்டு  யானைகள் கூட்டம் தொடர்ந்து விவ சாய நிலத்திற்குள் புகுந்து சேதப் படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், மேட்டுப்பாளை யத்தையொட்டிய தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஓடந்துறை, ஊமப் பாளையம், தாசம்பாளையம், நெல் லித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தென்னை, வாழை மற்றும் அவரை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், சனியன்று இரவு தோலம்பாளையத்தில் உள்ள மணல் காடு கிராமத்தில் உள்ள ராமசாமி என்கிற விவசாயின் வாழை தோப்பிற் குள், காட்டு யானை கூட்டம் ஒன்று புகுந்து, வாழைத்தர்களை தின்ற தோடு மிதித்து சேதப்படுத்தியது. சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நாசமானது. ஞாயிறன்று காலை நிலத் திற்கு சென்ற விவசாயி ராமசாமியின் குடும்பத்தார் வாழை தோப்பிற்குள் காட்டு யானை கூட்டம் வந்து நாசப் படுத்தியதை கண்டு அதிர்ச்சியடைந்த னர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், யானை கூட்டம் கிரா மத்திற்குள் வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. வனத் துறையினர் இப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு, வனத்தைவிட்டு விலங்கு கள் ஊருக்குள் வாராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன எல்லையிலேயே பட்டாசுகளை வெடித்து விரட்ட வேண்டும். பாதிக் கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும் என்றனர்.