districts

img

இந்து பெண்ணின் இதயம் இஸ்லாமிய இளைஞருக்கு...

கோவை, நவ. 6- கேரளாவை பூர்வீகமாக கொண்ட இஸ் லாமிய இளைஞரின் இருதயம் செயல் இழந்த நிலையில், விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த இந்து பெண்ணின் இதயத்தை பெற்று இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மனிதம் போற்றும் மகத்தான சாதனையை மருத்துவத்துறை மேற்கொண்டுள்ளது. கேரளாவை பூர்விகமாக கொண்டவர் ஆட்டோ ஓட்டுநரான ரகுமான் (38). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல் நல குறைவு ஏற்பட்டு கோவை பந்தைய சாலை யில் உள்ள தனியார் (கேஜி) மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் கள், ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வு களின் இயக்கம் குறைவாகவும், ரத்த குழாய் களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செய லிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர். உயிருக்கு போராடிய ரகுமா னுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலை யில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதி யைச் சேர்ந்த மஞ்சுளா (51) என்ற பெண், விபத் தில் சிக்கி பெருந்துறை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில், கடந்த 4 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்த னர்.  இதனையடுத்து, விடியல் செயலி மூலம் மஞ்சுளாவின் இதயம் தானமாக அளிக்கப் பட இருப்பதை அறிந்த, கேஜி மருத்துவ மனை மருத்துவர்கள் சிகிச்சைக்கான உபகர ணங்களை எடுத்து கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு, அரசு மருத்துவர்களின் உதவியோடு மஞ்சுளாவின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். பின்னர், மருத்துவ துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் பணியா ளர்கள் உதவியுடன், 50 நிமிடத்தில் பெருந்துறை யில் இருந்து கோவைக்கு மின்னல் வேக பயணத்தில், கோவை கேஜி மருத்துவம னைக்கு வந்தடைந்தது. பின்னர் ரகுமானுக்கு மஞ்சுளாவிடமிருந்து பெறப்பட்ட இருதயம் பொருத்தப்பட்டது.

மயக்கவியல் துறை மருத் துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். இதுகுறித்து இருதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கூறுகையில், தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்த விடியல் செயலியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடைபெற்றது. ஒரே மருத்துவமனை யில் இருந்து இருதய மாற்று அறுவை  சிகிச்சை செய்வதே மிக கடினமான ஒன்று. இந்நிலையில், வெகுதூர பயணத்தை காவல் துறை, மருத்துவத்துறை, ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து, இந்த  அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியுள்ள னர். இந்தியாவிலேயே உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் கட்ட மைப்பை தமிழ்நாடு அரசு வைத்துள்ளது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது, என்றார். முன்னதாக, ரகுமானுக்கு மறு வாழ்வு தந்த அனைவருக்கும், ரகுமானின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.  இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகர மாக செய்து முடித்த மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இருதயம் செயலிழந்து உயிருக்கு போராடிய இஸ்லா மிய வாலிபரின் உயிரை, இந்து பெண்ணின்  இருதய கொடையால் மறுவாழ்வு பெற்றிருப் பது, வாழ்வில் மனிதமே போற்றத்தக்கது என்பதனை உணர்த்துகிறது.