districts

img

நீதிமன்றம் கொட்டு வைப்பதற்குள், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்

கோவை, டிச.1- தமிழக ஆளுநர் தனக்கு வானளா விய அதிகாரம் இருப்பதாக நினைத்து செயல்பட்ட நிலையில் அவரது தலை யில் நீதிமன்றம் கொட்டு வைத்தி ருக்கின்றது என விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல். திரு மாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமானம்  மூலம் கோவை வந்தார். விமான நிலை யத்தில் அவர் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது அயோத்திதாசர் மணிமண்டபம் என்ற நீண்ட கால  கோரிக்கையை நிறைவேற்றியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கி றோம். டிசம்பர் 23 திருச்சியில், வெல் லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறு கிறது, இதில், இந்தியா கூட்டணி  தலைவர்கள் பங்கேற்க இருக்கின்ற னர்.  5 மாநில தேர்தல் வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு காங்கிரஸ்  கட்சிக்கு ஆதரவாக வந்திருப்பது ஆறு தல் அளிக்கின்றது. கர்நாடக மாநி லத்தில் பாடம் புகட்டியதை போல, 5  மாநிலத்திலும் பாஜகவிற்கு தோல் வியை கொடுப்பார்கள் என நாடே எதிர்பார்க்கின்றது. பாஜக-வை  அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளு டன் இந்தியா கூட்டணியின் செயல் பாடு இருக்கின்றது. தமிழக ஆளுநர் உள்நோக்கத்து டன் தமிழக அரசுக்கும், திமுகவிற் கும் நெருக்கடி கொடுக்கும் வகை யில் செயல்படுகின்றார். பல்கலைக் கழக மசோதாக்கள் திருப்பி அனுப்பி யது அரசமைப்பு சட்ட விரோதமா னது. பல்கலைக்கழக வேந்தர் நிய மனங்கள் முதல்வரால் என்பதை ஆளுநரால் சகிக்க முடியவில்லை. தனியார் பல்கலைக்கழக  வேந்தர்க ளாக  உரிமையாளர் இருப்பதை ஏற் றுக்கொள்கின்றார், ஆனால் முதல் வர் அரசின் பல்கலை கழகங்களுக்கு  வேந்தராக இருப்பது ஆளுநரால் ஏற்க இயலவில்லை. தமிழக ஆளு நரின் போக்கை சுட்டிகாட்டி நீதிமன் றம் கண்டித்து இருக்கின்றது. உச்ச நீதிமன்றம் கொட்டு வைப்பதற்கு முன்பு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப் பார் என நினைக்கிறேன், என்றார்.