கோபி, ஏப்.20- கோபி அருகே கடந்த 25 ஆண்டு களுக்கு முன் கட்டி வழங்கப்பட்ட தமி ழக அரசின் இலவச கான்கீரிட் வீடு இர வில் இடிந்து விழுந்தது, நல்வாய்ப்பாக அவ்வீட்டில் வசித்து வந்த தம்பதி உயிர் தப்பினர் ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சிக் குட்பட்ட ரக்கணம்பாளையத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் 40க்கும் மேற் பட்ட ஏழை குடும்பத்தினருக்கு கான்கீ ரிட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக் கப்பட்டது. இந்நிலையில் அம்மாபா ளையம் ரக்கணம்பாளையத்தில் கட்டி வழங்கப்பட்ட கான்கீரிட் தொகுப்பு வீடு கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிதலமடைந்து இடிந்து விழும் நிலை யில் இருந்தது. இதில் சில வீடுகள் எந்த நேரத்தில் இடிந்து விழும் நிலை ஏற் பட்டதால் இடிந்து விழும் வீடுகளுக்கு பதிலாக மாற்று வீடுகள் கட்டி வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இக் கோரிக்கையை இதுவரையில் அதிகாரி கள் கண்டுகொள்ளாத நிலையே இருந் தது. கான்கீரிட் தொகுப்பு வீடுகள் முற்றி லும் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டதால், பலரும் சிதலமடைந்த தொகுப்பு வீடு களை விட்டு வெளியேறி அருகாமை வீடுகளிலும் உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் தங்கினர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ராமன், சரசாள் என்பவர் குடியிருந்து வந்த கான்கீரிட் தொகுப்பு வீடு அதிகா லையில் பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக ராமன் மற்றும் சரசாள் அருகாமையில் உள்ள வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டி வழங்கிய இந்த கான் கீரிட் தொகுப்பு வீடுகளில் பலதும் சிதல மடைந்துள்ளது. உடனடியாக இப்பகுதி மக்களுக்கு தற்காலிகமாக மாற்று இடத் தில் குடியமர்த்திவிட்டு, புதிய வீடுகள் கட்டி வழங்க வேண்டும், என்றனர்.