districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வீட்டுமனை அனுமதியில் குளறுபடி: அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு

நாமக்கல், ஜன.13- குமாரபாளையம் அருகே வீட்டுமனை அனுமதியில் குளறுபடி என எழுந்த புகாரின்பேரில், மாவட்ட வருவாய் அலு வலர் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட, நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை கள் அமைக்கப்பட்டன. அரசு சார்பில் பெறவேண்டிய அனு மதிகள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு தரப்பினர் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளதாக தெரிவிக்கின்ற னர். இதுசம்பந்தமாக இட உரிமையாளர்களும் உரிய ஆவ ணங்களை சமர்பித்துள்ளதாக தெரிகிறது. சில நாட்கள் முன்பு இங்கு காவல் துறை பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றபோது, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த னர். அப்போது, மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்து, நடவ டிக்கை மேற்கொள்ளுங்கள் என போலீசார் கூறினர். இதை யடுத்து அளிக்கப்பட்ட புகாரின் போரில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், கோட்டாட்சியர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரி கள் நேரில் ஆய்வு செய்தனர். இதன் ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரி வித்துள்ளனர்.

மதுபான விற்பனை ஊழியர் மீது குற்றச்சாட்டு

சேலம், ஜன.13- மது போதையில் தகராறில் ஈடுபடுவதாக மதுபான விற்பனை மேற்பார்வையாளர் மீது பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம், தாரமங்கலம், சந்தை பேட்டை அருகே அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனை மேற்பார்வையாளராக வேலாயுதம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணி நேரங்க ளில் மது போதையில், கடைக்கு வருபவர்களி டம் சண்டையிட்டும், தகாத வார்த்தையில் சாதி பெயரை சொல்லி திட்டி வருவதாக பணி யாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், பணி நேரங்களில் அதிகளவில் மது குடித்து  போதையில் தகராறு செய்து வருவதாகவும், தினமும் ரூ.4 ஆயிரம் பணம் தர வேண்டும்  என மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. எனவே, இவர் மீது அரசு அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக் கடையில் பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ள னர்.

பெண் கொலை: போலீசார் விசாரணை

தருமபுரி, ஜன.13- பென்னாகரம் அருகே வீட்டின் தனியாக இருந்த பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (45). 10 வருடமாக கணவ னைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அரசு மருத்துவமனை யில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாள ராக பணியாற்றி வந்தார். இவருடைய இரண்டு மகன்கள் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்ற னர். இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கைகள் கட்டப்பட்டு, தலையின் பின்பக்கத்தில் அடிபட்டு,  உடலில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்துள் ளார். இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, தடவியல் துறை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை  செய்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், துணை காவல் கண்காணிப் பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் காவல் ஆய்வாளர் முத் தமிழ் செல்வன், ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் குமரவேல் உள்ளிட் டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் சட லத்தை பிரேத பரிசோதணைக்காக பென்னாகரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண் கடத்தல்

தருமபுரி, ஜன.13- காரிமங்கலம் பகுதிக ளில் சட்ட விரோதமாக ஏரியி லிருந்து மண் கடத்தப்படுவ தாக புகார் எழுந்தது. அதன் பேரில், காரிமங்கலம் போலீ சார் பெரியாம்பட்டி - பாலக் கோடு சாலையில் கண்கா ணிப்பு பணியை தீவிரப்படுத் தினர். அப்போது, பூலாப் பட்டி அருகே வந்த டிராக் டரை நிறுத்தி சோதனையிட் டதில் நொரம்பு மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டர் மற் றும் ட்ரெய்லரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி தர்ணா

திருப்பூர், ஜன.13- உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து  மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட நிலை யில், எந்தவித காரணங்கள் இன்றி பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்ததால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் ஆட்சியர் அறை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தண்ணீர் திறந்து விடாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து மூன்று முறை மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலை யில், எவ்வித முன்னறிவிப்புமின்றி வெள்ளியன்று இரவு பேச்சு வார்த்தையை ஒத்திவைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இதனால் தங்களுக்கு குடிநீர் ஆதாரமும், கால்நடை களுக்கான குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியாத சூழல்  ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அறை முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய குளத்தில் குப்பைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, ஜன.13- உடுமலை பெரிய குளத்தில் குப்பைகள் கொட்டி தீ மூட்டுப வர்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.  உடுமலை மூணார் செல்லும் சாலையில் உள்ள பெரிய குளம் சுமார் 404 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த குளத்தின் நீர்  இப்பகுதி விவசாயிகளுக்கு பயன்படுவதுடன், ஐந்து கிலோ  மீட்டர் தூரம் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்வுக்கும் காரண மாக உள்ளது. மேலும், குளத்தின் அருகே அமைக்கப்பட் டுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குரல்குட்டை ஊராட்சி  பொதுமக்களுக்கு தண்ணீர் செல்கிறது. குளத்தில் வளர்க்கப் படும் மீன் இப்பகுதி மக்களுக்கு நேரடியாக விற்பனை செய் யப்படுகிறது. கால்நடைகளை வைத்துள்ள நிலம் இல்லாத  பொதுமக்கள் இந்த குளப்பகுதியை மேய்ச்சல் நிலமாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொது மக்களுக்கு மிக வும் பயன் உள்ளதாக இருக்கும் இந்த பெரிய குளத்தில் குப் பைகள் கொட்டப்பட்டு, இரவு நேரங்களில் தீ மூட்டப்படுகிறது.  மேலும், குளத்தை சுற்றி மரம் சம்மந்தப்பட்ட பொருட்கள் தயா ரிக்கும் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பெயின்ட் மற்றும் மரக்கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதி மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர், ஜன.13- திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங் கில் தமிழ் வளர்ச்சி துறை சார் பில்  நடைபெற்ற நிகழ்ச்சி யில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர்  த.ப. ஜெய்பீம் வெள்ளி யன்று  வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொ) புவனேஸ்வரி மற் றும் அலுவலகப் பணியா ளர்கள் ஆகியோர் உடனி ருந்தனர்.

கமிசன் தராமல் ஏமாற்றும் மருத்துவர்? நில முகவர் சங்கத்தினர் புகார்

ஈரோடு, ஜன.13- நிலம் வாங்கியதற்கான தரகுத் தொகையை தராமல் ஏமாற்றி வரும் மருத்துவர் மீது காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நில முகவர் சங்கத்தினர் புகாரளித்தனர். ஈரோடு - பெருந்துறை சாலையில் ஈரோடு மெடிக்கல்  சென்டர் உள்ளது. இம்மருத்துவமனையின் உரிமையாள ராக முருகன் மற்றும் குப்புசாமி ஆகியோர் நிலம் வாங்க  எண்ணினர். அப்போது ஈரோடு மாவட்ட நில முகவர் சங்கத் தில் உறுப்பினராக இருக்கும் அப்பாசாமி மற்றும் குணசே கர் ஆகியோர் அவர்களைத் தொடர்பு கொண்டனர். இதன்பின்  நசியனூர் சாலையில் உள்ள ஐயர் என்பவருக்குச் சொந்த மாக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுப்பது என முடிவா னது. அதன் மதிப்பு ரூ.12 கோடி எனக் கூறப்பட்டது. அதற்கு  கமிசனாக வாங்குபவரும், விற்பவரும் இணைந்து ரூ.24  லட்சம் தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையில், தரகர்களுக்குத் தெரியாமலே கடந்த அக்.25  ஆம் தேதி கிரையத்தை முடித்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த தரகர்கள் கேள்வி எழுப்பினர். தருவ தாகக் கூறிய தரகு பணத்தை தராமல் கடந்த 3 மாதங்களாக தரா மல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், கமிசன்  தராமல் ஏமாற்றிய மருத்துவரிடமிருந்து உரிய தொகையை  பெற்றுத்தரக்கூறி நில முகவர் சங்கத்தினர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த னர். அப்போது அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வ மணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் காவல் அலுவல கத்தில் திரண்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூர் காவல் நிலையத்திற்கு பாராட்டு

கோவை, ஜன.13- கடந்த ஒரு ஆண்டில் கோவை மாவட்டத்திலேயே சிறப் பாக செயல்பட்ட சூலூர் காவல் நிலையத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். சூலூர் காவல் நிலையம் கடந்த ஒரு ஆண்டில் கோவை  மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களை விட சிறப் பாக செயல்பட்டதாக கூறி பாராட்டு தெரிவிக்கப்பட்டது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராய ணன், சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சூலூர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சூலூர் காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடத்தில் 3 டன் குட்கா, 125 கிலோ கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காணாமல் போனவர்கள் குறித்த 90 வழக்குகளில் 77 வழக் குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து மீட்கப்பட் டுள்ளனர். மேலும், 49 குற்ற வழக்குகளில் 40 வழக்குகளில்  குற்றவாளிகளை பிடித்தும் குற்ற வழக்கு சம்பந்தப்பட்ட  பொருள்களை கைப்பற்றியும் சிறப்பாக செயல்பட்ட மைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித் துள்ளார்.

வனவிலங்குகள் குறித்து வதந்தி பரப்பியவர்கள் கைது

உதகை,ஜன. 13- பந்தலூர் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள தாக வாட்ஸ் அப் மூலம் வதந்தி பரப்பி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிக ளில் வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருகிறது.  இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்ற னர். இந்நிலையில், வனவிலங்குகள் வருவதாக வதந்தியை  வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சிலர் பரப்புவது தெரியவந்தது.  மேலும், சித்தரிக்கப்பட்ட வீடியோவினை பகிர்ந்து அச்சத்தை  ஏற்படுத்தி வருபவர்கள் குறித்து வனத்துறையினர் காவல்து றையில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து காவல்துறை யினரின் விசாரணையில், சித்தரிக்கப்பட்ட வீடியோவினை பதிவிட்ட யூசப் அலி (28), முசபுதுல் அலி (20), ராஜ்குமார்  (24) ஆகியோர் பகிர்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், இதுபோன்ற வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மற்றும்  வனத்துறை எச்சரித்துள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்ல அலைமோதல்

கோவை, ஜன. 13- பொங்கல் பண்டிகையையொட்டி வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலா னோர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்வ தால் பஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோ தியது. போதிய பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டாலும் சொந்த  ஊருக்கு செல்லும் பலரும் ஆர்வத்துடன் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி பயணிப்பதை பார்க்க முடிந்தது. கோவை  ரயில் நிலையத்திலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் பயணிக்க  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.  ரயில் மற்றும் பேருந்து மட்டுமின்றி சொந்த கார்கள் மற்றும்  இருசக்கர வாகனங்கள் மூலம் பயணிப்போரின் எண்ணிக்கை யும் அதிகமாக இருப்பதால் கோவையில் இருந்து வெளியூர்  செல்லும் அவிநாசி சாலை, கோவை திருச்சி சாலை, பொள் ளாச்சி சாலை, பாலக்காடு மற்றும் சத்தியமங்கலம் சாலை  என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதி கம் காணப்பட்டது.

பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை

கோவை, ஜன.13- சூலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த  பெண்ணை கட்டி போட்டு, இளைஞர் ஒருவர்  20 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த  பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள  ராமையா நகரைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர், மனைவி விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகி றார். கல்யாணசுந்தரம் பணி நிமித்தமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சவுதி அரேபி யாவில் உள்ளார். இந்நிலையில் வீட்டில்  தனியாக விஜயலட்சுமி வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று விஜயலட்சுமியின் இளைய மகன் பள்ளி முடித்து மாலை வீட்டிற்கு வந் துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்புற மாக தாளிடப்பட்டு சரியாக மூடாமல் இருந் துள்ளது. வழக்கம் போல் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த படுக்கை அறையில் விஜயலட்சுமியின் கை கால்கள் கட்டப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகன், உடனடியாக அங் கிருந்த செல்போனை எடுத்து அருகில் இருந்த தனது உறவினர்களை அழைத்துள் ளார். வீட்டிற்கு வந்து பார்த்தவர்கள் உடன டியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சூலூர் போலீசார் வழக்கு பதிவு  விசாரணை மேற்கொண்டனர்.  இதில், விஜயலட்சுமி வீட்டிற்கு மேலே  புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அந்த  வீட்டில் விட்டுப்போன வேலைகளை செய்வ தற்காக, கடந்த மூன்று நாட்களாக பாபு  என்பவர் வேலை செய்து வந்துள்ளார். விஜய லட்சுமி தனியாக இருப்பதை நோட்டமிட்ட பாபு வீட்டில் யாரும் இல்லாததை பயன்ப டுத்தி விஜயலட்சுமியை கட்டிப்போட்டு 20  சவரன் நகை கொள்ளையடித்து சென்றுள் ளார். சம்பவத்துக்கு முன்னதாக பாபு வீட்டுக் குள் ஹெல்மெட்டுடன் நுழைந்து வெளியே செல்லும் சிசிடிவி காட்சியின் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

ஓடும் காரில் திடீரென தீ விபத்து

கோவை, ஜன.13- கோவை மாநகரம், கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சாமு வேல். இவர், தனது நண்பருடன் பணி நிமித்தமாக காரில்  ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி வரை சென்று விட்டு மீண்டும்  கோவை திரும்பியுள்ளார். காரை சாமுவேல் ஒட்டி வந்த நிலை யில், அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தபோது காரின்  முன் பக்கமாக புகை வெளியேறியுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாமுவேல், சுதாரித்துக் கொண்டு உடனடி யாக சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நண்பருடன் வெளி யேறியுள்ளார். அப்போது, எஞ்சினில் திடீரென தீப்பிடித்து கார்  முழுவதும் மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து சாமுவேல் உடனடியாக அன்னூர் தீயணைப்பு  நிலையத்திற்கு தகவலளித்தார். அதன்பேரில் அங்கு வந்த  தீயணைப்பு வீரர்கள் கார் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். அன்னூர் போலீசார் விபத்து  குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்சோ வழக்கு - 20 ஆண்டு சிறை

ஈரோடு, ஜன. 13- ஈரோடு பெரியார் நகர் பகுதி அருகே, கோவிந்தராஜ் நக ரைச் சேர்ந்தவர் சாந்தகுமார்|(49). இவர் தையல் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018  ஆம் ஆண்டு வரை அப்பகுதியில் உள்ள 9 வயது சிறு மியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து  வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து 2018 இல் சிறுமி யின் தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.  புகாரின்பேரில் சாந்தகுமார் கைது செய்யப்பட்டார்.  இவ்வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வியாழனன்று அளிக் கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தகுமாருக்கு 20  ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராத மும் விதித்து நீதிபதி ஆர்.மாலதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.