கோவை, ஜன.10- பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக்கில் விற்பனை இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை எனவும், விற்பனையை குறைப்பதே அரசின் இலக்கு என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்வை வீட்டு வசதி மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந் திகுமார் பாடி ஆகியோர் துவக்கி வைத்தனர். சூலூர் கலைமகள் நக ரில் உள்ள நியாய விலை கடைக்கு உட்பட்ட சுமார் 200 குடும்பங்க ளுக்கு இந்த பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. அப்போது ஒவ் வொரு பயனாளர்களையும் நேரில் சந்தித்து பரிசு தொகுப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்டத்தில் 1537 ரேஷன் கடைகளில் 11 லட்சத்து 4 ஆயி ரத்து 836 குடும்ப அட்டைதாரர்க ளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கம், முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங் கப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்களுக்கு குடும்ப அட்டை தாரர்கள் யாரும் விடுபட்டு விடக் கூடாது என முதலமைச்சர் ஸ்டா லின் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 14 ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொ குப்பு வழங்கி முடிக்க இலக்கு நிர் ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை, மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களை சமாளிக்க வேண்டிய கடினமான சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. ஒன் றிய அரசின் உதவி சரிவர கிடைக் கப்படாத போதும், சில இடர்பாடு களை சமாளித்து தற்போது அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கு வதை முதலமைச்சர் உறுதி செய் துள்ளார் என்றார். டாஸ்மாக் பொங்கல் விற்ப னைக்கான இலக்கு குறித்த கேள் விக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக் கப்படவில்லை, விற்பனையை குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் இலக்கு. டாஸ்மாக் கில் விற்பனையாகும் தொகை தவறான இடத்திற்கு செல்கிறதா என்பதை கண்காணிக்கவே வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது என அமைச்சர் முத்துசாமி பதில் அளித்தார்.