சேலம், ஜூலை 22- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனியன்று வெகுவாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் உள்ள கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு துறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக் கிறது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரை யோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கி ருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. வியாழனன்று அணைக்கு விநாடிக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வெள்ளியன்று அணைக்கு வரும் நீரின் அளவு 154 கன அடி யாக இருந்தது. இந்நிலையில் சனியன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 107 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 69.96 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 32.66 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 10,000 கன அடியாக குறைக் கப்பட்டது. இது படிப்படியாக மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ள தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப் பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. குடிநீர் தேவைக் காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.