தருமபுரி, அக்.28- ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி முத்து நினைவு அறக் கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகி பி.பொன்னுசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஏ.விஜியமுருகன் சிறப்புரை யாற்றினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்டத் தலைவர் எம்.குமார், மாவட்ட துணைத்தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட நிர்வாகிகளான எஸ்.தீர்த்தகிரி, ஏ.ஜீவானந்தம், கே.அன்பு, சிங்காரம், ஆர்.சக்திவேல், ராமகிருஷ்ணன், டி. சேகர் ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 50 தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.140 வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். தமிழ கம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாவட்ட அமைப்பாளராக பி.பொன்னு சாமி உள்ளிட்ட 9 பேர் கொண்ட அமைப்புக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.