districts

img

உயிருக்கு போராடி வந்த யானை உயிரிழப்பு

கோவை, ஜன.27- வனத்தை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் உடல் நலக்குறைவால்  உயி ருக்கு போராடி வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பல னின்றி உயிரிழந்த சம்பவம்  வன உயிரின ஆர்வலர்களி டையே சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் அடுத் துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒடந்துறை காப்புக்காடு லிங்காபுரம் வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனப் பகுதியை ஒட்டி  சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள முருகன் என்பவரின் விவசாய தோட் டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப் பட்டு நடக்க இயலாமல் தரையில் சாய்ந்து கிடப்பதை கண்டறிந்தனர். உயிருக்கு போராடி வந்த யானை குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டதை அடுத்து, யானையை கண்காணிக்க துவங்கினர். இதனைத் தொடர்ந்து  மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு வினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  யானையின் உடல் நிலை குறித்து ஆராய்ந்து உடனடியாக சிகிச்சையை துவங்கினர். படுத்து கிடக்கும் பெண்  யானைக்கு முதற் கட்டமாக  முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட் டச்சத்து மருந்துகளை ஊசி மூலம் செலுத் தினர். மேலும் ஜே.சி.பி எந்திரம் வரவழைக் கப்பட்டு அதன் மூலம் சாய்ந்து கிடக்கும் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சி யிலும் ஈடுபட்டனர். ஆனால் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை. இதனைய டுத்து மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து யானையை காப்பாற்ற முயன்றனர். ஆனால், வெள்ளியன்று யானை  சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.  இச்சம்பவம் வன உயிரின ஆர்வலர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.