ஈரோடு, ஏப்.8- அகழியில் தவறி விழுந்த யானையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வனத் துறையினர் வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி யில் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகு தியில் உள்ள குளம், குட்டை, ஏரிகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே றுவது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் ஞாயிறன்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண் ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது. அதேப்பகுதியில் தங்கவேலு என்ப வருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே அந்த யானை வந்துள்ளது. அப்போது யானை தோட்டத்திற்குள் வராமல் இருப் பதற்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழி யில் தவறி கீழே விழுந்தது. ஏற்கனவே உணவு, குடிநீரின்றி பலவீ னமாக இருந்த அந்த பெண் யானை அக ழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர், அதன் காது நரம்பு வழி யாக குளுக்கோஸ் ஏற்றினர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப் பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.