ஈரோடு, நவ. 4- சத்தியமங்கலம் அருகே சாதிய வன்மத்தோடு கால் டாக்சி ஓட்டு நர் தாக்கப்பட்டதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது. சத்தியமங்கலம் அருகே புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பட்டியல் சமூகத் தைச் சார்ந்த இவர், சமூகநீதிக் கட்சியின் மாநில அவைத் தலை வரான ப.ராஜேந்திரன் கால் டாக்ஸி வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கரசம்பா ளையம் வாடகைக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பியுள்ளார். வரும் வழியில் அங்குள்ள கேஎம்எஸ் பேக் கரியில் டீ சாப்பிட்டுள்ளார். பின்னர் கடையில், பொருள்களை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல முயன் றார். அப்போது அங்கு இருந்த அரசூர் பகுதியைச் சேர்ந்த உதய குமார் (31), பங்களாமேடு பகுதி யைச் சேர்ந்த கோகுல் பிரசாந்த் (30) ஆகியோர் சாதியைச் சொல்லி திட்டியுள்னர். மேலும் அந்த கடை யில் அலங்காரத்திற்காக வைத்தி ருந்த பூச்செடி தொட்டியை எடுத்து ராஜேந்திரன் தலையில் அடித்து, காலால் எட்டி உதைத்தனர். இதில் ராஜேந்திரனின் மூக்கு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. அருகில் இருந்த வர்கள் தடுத்து தனியார் ஆம்பு லன்ஸ் மூலமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி ஆதிக்க வன்மத்தோடு, கொடூரமான முறையில் தாக்கப் பட்டு சித்திரவதைக்கு உள்ளான இச்சம்பவத்தை தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி வன்மை யாக கண்டித்துள்ளது. அத்துடன் தாக்கப்பட்ட ப.ராஜேந்திரனை தீண் டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பிபி.பழனிசாமி. பவானிசாகர் ஒன்றிய கமிட்டி செயலாளர் பி.ஜெ கநாதன், தலைவர் ஏ.பி.ராஜு, சத் தியமங்கலம் ஒன்றிய செயலாளர் கே.ரங்கசாமி உள்ளிட்ட தலைவர் கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர உதவி யாகவும், உறுதுணையாக இருப் போம் என்கிற உறுதியை அளித்த னர்.