திருப்பூர், ஜூலை 4 - திருப்பூரில் பிளவுபடுத்தும் வன்முறை வெறி அரசியல் நடவடிக்கையில் இந்து முன் னணி ஈடுபட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வீட்டை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதனிடையே ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு ஆதரவாக திமுக வினர் அவரது வீட்டின் முன்பாக திரண்டிருந்த னர். காவல் துறையின் முயற்சியைத் தொடர்ந்து இந்து முன்னணி அறிவித்திருந்த முற்றுகைப் போராட்டத்தில் இருந்து பின் வாங்கி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தில் வழக்கமான இந்து முன்னணியின் “தரத்தில்” அவர்கள் உரையாற்றினர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இடையே திடீரென எம்எல்ஏ செல்வராஜின் உருவப்படத்தை கிழித்து, தீ வைத்து எரித்து இழிவான முறையில் நடந்து கொண்டனர். இத்துடன் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர், எம்எல்ஏ வீடு இருக்கும் பகுதிக்குச் சென்று கோஷமிட்டு, தகராறு செய்ய முயன்ற னர். காவல் துறையினர் அவர்களை தடுத்துக் கொண்டு சென்றனர்.
போராட்டம் என்ற பெயரில் இந்த வன்மு றைத்தனமான இழி செயலை அவர்கள் நடத்தியதற்கு காரணம் எம்எல்ஏ செல்வராஜ், முதல்வருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்து முன்னணியின் நடவடிக்கையை சுட்டிக் காட்டியது தான்! சமுதாயத்தில் இந்து, முஸ்லிம் என்று மத அடிப்படையில் பிளவை, பகைமையை ஏற்ப டுத்தும் நோக்கத்துடன் வெறுப்பு அரசியல் நட வடிக்கைகளில் இந்து முன்னணி ஈடுபட்டு வரு வது அனைவரும் அறிந்ததே! இதை தனியாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்து முன்னணி மதரீதியாக மக்கள் ஒற்றுமையைப் பிளவு படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டது என் பதை எம்எல்ஏ சுட்டிக்காட்டியது தவறொன் றும் இல்லை. ஏதோ, தங்கள் சுயரூபத்தை எம்எல்ஏ அம்பலப்படுத்தி விட்டார் என்ற ஆத் திரத்தில் அவர்கள் இந்த வன்முறை இழிசெ யலை முன்னெடுக்கவில்லை. இந்த நடவடிக் கையை மேற்கொள்ளவும், அவர்களுக்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது. எம்எல்ஏ இந் துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை கட்டமைக்க வேண்டும். அதன் மூலம் இந்துக் கள் ஆதரவை தம் பக்கம் ஈர்க்கலாம் என்பது தான் இந்த போராட்டத்தின் நோக்கம். எப்போதுமே சமுதாயத்தில் மதரீதியாக பிளவுபடுத்துவதற்கு ஓர் எளியவழி இந்துக் களை “நாம்”, முஸ்லிம்களை “அவர்கள்” என்ற இரு துருவங்களாகப் பிளவுபடுத்துவ துதான். அதற்கு ஒரு தரப்பினரை ஆத்திரமூட் டுவது, தூண்டிவிடுவது, வெறி ஏற்படுத்து வது போன்ற செயல்களில் திட்டமிட்டு ஈடுபடு வது மதவெறி சக்திகளுக்கு கை வந்த கலை. எங்கெல்லாம் மதவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றனவோ, அங்கெல்லாம் இத்த கைய இரு துருவங்களாக இந்து, முஸ்லிம் என பிளவுபடுத்துவது நடைபெற்று இருக்கி றது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட எம்எல்ஏவை ஒரு தரப்பினருக்கு சார்பா னவர் என முத்திரை குத்தினால் தங்களுக்கு ஆதாயம் என்பது இந்துத்துவ சக்திகளின் கணக்கு. அதற்கு இந்து முன்னணி தூபம் போடுகிறது. முஸ்லிம் சிறுபான்மை சமுதா யத்தைச் சேர்ந்த சில மதவெறி குழுக்களும் இதற்கு இரையாகின்றன. இது இந்துத்துவ சக்திகளுக்கே ஆதாயமாக முடியும் என் பதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டு, இத்தகைய குழுக்களையும் நிராகரிக்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இவர் களது இந்த இழிவான வஞ்சக அரசியல் நடவ டிக்கைகளை எதிர்த்து மக்கள் மத்தியில் அம் பலப்படுத்த வேண்டும். சமுதாய ஒற்றுமை பிளவுபடுத்தப்படுமானால் அது திருப்பூரின் சமூக நல்லிணக்கம், அமைதிக்கும் மிகப்பெ ரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அத்துடன் திருப்பூரின் அடையாளமாகத் திகழும் பின்ன லாடைத் தொழில் வளர்ச்சிக்கும் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தி விடும். எனவே திருப்பூ ரின் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி களும் இந்து முன்னணியின் உள்நோக் கத்தை புரிந்து கொண்டு நிராகரிக்க வேண் டும். அதுவே திருப்பூரின் எதிர்காலத்துக்கு நல்லது. (ந.நி)