districts

img

ஒயிலாட்டம் ஆடிய கோவை மாவட்ட ஆட்சியர்

சூலூர், நவ.21-  சூலூரில் நடைபெற்ற ஒயி லாட்ட நிகழ்ச்சியில் பம்பை அடித்து உற்சாகத்துடன் ஒயி லாட்ட நடனமாடிய கோவை  மாவட்ட ஆட்சியரின் செயல்  பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. கோவை மாவட்டம், சூலூர் கணியூரில் பாரம்பரிய ஒயி லாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங் கேற்ற நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்த சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.  இதில் பல்வேறு ஒயிலாட்ட பாடல்க ளுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடனம் ஆடினர். நடனத்தை ரசித்த கோவை மாவட்ட ஆட்சியர் ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து அங்கு பம்பை அடித்துக் கொண்டிருந்தவரிடம் பம்பை யை வாங்கி அடித்து ஒயிலாட்ட நடனம் ஆடி னார். அவருடன் ஒயிலாட்டக் கலைஞர் களும் நடனமாடியது அங்கிருந்த பொதுமக் களை கவரும் விதமாக இருந்தது.