தாராபுரம், செப்.9- தாராபுரம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் வழக்கு கள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங் கா புர்வாலா காணொளி காட்சி வாயிலாக வெள்ளியன்று மாலை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க சென்னை உயர்நீதி மன் றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படை யில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதி மன்றங்களில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது. சென்னையில் அதற் கான காணொளி காட்சி மூலம் தொடக்க விழா நடைபெற்றது. தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபும் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடரா ஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் அமர்வு மாவட்ட நீதி பதி ஜான்மனோ, சார்பு நீதிபதி எம்.தர்மபிரபு, உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்கா முடி, குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். தாராபுரம் மையத்திற்கு வழக்கறிஞர்கள் எஸ்.கே. கார் வேந்தன், சேகர், ராஜகோபால், சிவராஜ் ஆகி யோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின் போது தாராபு ரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செழி யன், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் உதவியாளர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.