உதகை எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் அடிப்படை வசதி கள் இன்றி தவிக்கும் ஊர் மக்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஆதிரா, உதகை தாலுகா தலைவர் என்.பானுமதி, கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் உள்ளிட்ட திரளான பெண்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.