திருப்பூர், அக். 16 - திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் மருத்து வர் தவறான சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 50ஆயிரம் வழங்க திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்த ரவிட்டது. இது பற்றிய விபரம் வருமாறு: குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல் நகரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமன் என்கிற தம்பு ராஜ். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் குடிமங்கலம் ஒன் றியச் செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயிற்று வலி காரணமாக பெதப் பம்பட்டி பொள்ளாச்சி சாலையில் உள்ள மருத்துவர் அழகிரி சாமி என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அங்கு தம்புராஜை பரிசோதித்த மருத்துவர் ஊசி போட்டு மாத்திரை கொடுத்திருக் கிறார். ஆனால் வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து மீண்டும் அங்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். அப்போது மருத்து வர் ஊசி போட்டிருக்கிறார். ஊசி போட்ட இடத்தில் கடும் வலி யும், வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இதன் பிறகு தம்புராஜ் உடுமலை அரசு மருத்து வமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார். அங்கு இவரை பரிசோதித்த அரசு மருத்துவர், கையில் ஊசி போட்ட இடத்தில் சீழ் பிடித்திருப்பதாக கூறி, அறுவை சிகிச்சை செய்தி ருக்கிறார். ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவ சிகிச்சை பெற்று தம்புராஜ் குணமடைந்தார். மருத்துவர் அழகிரிசாமி தவறான சிகிச்சை அளித்ததால் தனக்கு கையில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டதுடன், இதனால் தனது வேலை பாதிக்கப்பட்டு, மன உளைச்சல் ஏற்பட்டதுடன், வருமான இழப்பும் ஏற்பட்டுள் ளது. எனவே மருத்துவர் அழகிரிசாமி இழப்பீடு வழங்க வேண் டும் என்று திருப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக் கல் செய்தார். இதில் மனுதாரர் தம்புராஜ் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆனந் தன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதி மன்ற நடுவர் தீபா, தவறான சிகிச்சை அளித்து தம்புரா ஜூக்கு பாதிப்பு ஏற்படுத்தியதால் மருத்துவர் அழகிரிசாமி யின் சேவைக் குறைபாடு உறுதியாகிறது. மன உளைச்சல் ஏற்படுத்திய நிலையில் தம்புராஜுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.