உதகை, ஆக.4- கோத்தகிரியில் ரூ.4.50 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டு மான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பிஎஸ் என்எல் அலுவலகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு ஊழியர்கள் குடி யிருப்புகள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் பழ மையான இந்த குடியிருப்புகளின் மேற்கூரை கள் மற்றும் கட்டடங்களின் சுவர்கள் பழுத டைந்து காணப்பட்டன. அதனால் அந்த பழைய குடியிருப்புக்களை இடித்து அகற்றி விட்டு, அதேபகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட இரண்டு கட்டடங்களும், அதேபோல் கோத்த கிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுத டைந்த வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடத்தை இடித்து அகற்றி அங்கும் தலா 4 வீடுகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே இருந்த பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றப் பட்டது. தற்போது நிலத்தில் சுமார் 10 அடி ஆழத் திற்கு மண் அகற்றப்பட்டு, அஸ்திவார கான் கிரீட் தூண்கள் அமைக்கும் பணியும், செம் மண்ணுடன் எம்.சாண்ட் மண்னை தண்ணீரு டன் கலந்து கொட்டி தரைத்தளத்தை பலப் படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.