districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

1000 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை, ஜூலை 21- கோவை, நஞ்சுண்டாபுரத்தில் சிலர் போதை மாத்திரை களை பதுக்கி வாலிபர்கள், கல்லூரி மாணவர்களுக்கு விற் பனை செய்வதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில், போலீசார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேக்கரி யின் பின்புறம் சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 வாலிபர் களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வலி நிவாரணி மாத்திரைகள் சட்ட விரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட போத்தனூர், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த இம்ரான்கான் (26), போத்தனூர், எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்த முகமது யூசுப் (25) ஆகிய 2  பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1041  போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்

ஈரோடு, ஜூலை 21- ஈரோடு அருகே உள்ள முத்தம்பாளையத்தை சேர்ந்த 34  வயது இளைஞர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உதகையில் ஒரு விபத்தில் சிக்கினார். காயமடைந்த நிலையில், சிகிச்சைக் காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் வியாழனன்று மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர்.  இதைத்தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உயர் மருத்துவ குழுவினர், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலில் இருந்து இதயம், 2 சிறு நீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்து  சென்னை, கோவை, சேலம், ஈரோட்டில் உள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.  மூளைச்சாவு அடைந்தவரின் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மற் றும் மருத்துவமனை மருத்துவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உறுப்புகளை பாதுகாப்புடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்படுவது 2 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அளித்த உறுதியேற்று  சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

ஈரோடு, ஜுலை 21- கூலி உயர்வு கேட்டு ஈரோட்டில் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சுமைப்பணி யாளர்கள் போராட்டம், அமைச்சர் சு.முத்துச் சாமியின் உறுதியையேற்று தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். ஈரோடு மாவட்டத்தில் சுமைப்பணி தொழி லாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை கடந்த  6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட் டுள்ளது. உரிமையாளர்கள் தரப்பு வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த் துவதில் குறியாக இருந்தது. இந்நிலையில், சிஐடியு ஈரோடு மாவட்ட  சுமைப்பணியாளர்கள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அண்ணா தொழிற்சங்க பேரவை, சுமை தூக்குவோர் மத்திய சங்கம், பொது தொழி லாளர் மத்திய சங்கம், பாட்டாளி சுமை தூக்கு வோர் மத்திய சங்கம், இபிடிஎஸ் மற்றும்  காந்தியடிகள் சுமைதூக்குவோர் சங்கம்  உள்ளிட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிற் சங்கங்கள் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது. அறிவிக் கப்பட்டபடி கடந்த 13ஆம் தேதி முதல் வேலை  நிறுத்தம் மற்றும் தொடர் தர்ணா நடை பெற்றது. இதனையடுத்து, இப்போராட் டத்தின் தீவிரத்தை உணர்ந்த வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருதரப்பாருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட செய்வோம் என்கிற உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தொழிற்சங்கத்தரப்பு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள் ளப்படும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடரந்து, வெள்ளியன்று தொழிலாளர் கள் வழக்கம் போல் வேலைக்குத் திரும்பி யுள்ளனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

ஈரோடு, ஜூலை 21- ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலான் தோப்பு பகுதி யைச் சேர்ந்த ஈஸ்வரி (52) என்பவர் ஈரோடு எஸ்பியிடம் வியாழனன்று புகாரளித்தார். அதில், பவானி அருகே உள்ள  மைலம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, தாங்கள் நடத்தி வரும் திருமண தகவல் மையம் மூலம் என்னுடைய மகனுக்கு பெண் பார்த்து கொடுப்பதாக அறிமுகமானார்கள். அப்போது  அவர்கள், என்னுடைய மகனுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ரூ.15 லட்சம் முன் பணமாக தரவேண்டும் என்றும் கூறினர். அதை நம்பி நான், 2 தவணைகளாக ரூ.15 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன்.  ஆனால் இதுவரை அந்த தம்பதி எனது மகனுக்கு வேலை  வாங்கி தரவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே, மோசடி செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தருமபுரி, ஜூலை 21- அரூர் ஒன்றியத்தில் குழாய் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், மூன்று நாட்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தின் தருமபுரி திட்ட பராமரிப்பு கோட்டத்தின் கீழ் அரூர் ஒன் றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளுக்கு தினந்தோறும் ஒகே னக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அக்ர ஹாரம் அருகே நெடுஞ்சாலை துறையின் மூலம் சாலை விரி வாக்க பணிகளுக்காக குடிநீர் குழாய்களை மாற்றி அமைக் கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படமாட்டாது.  எனவே, 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதால் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன் படுத்தி கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி: தேயிலைத் தோட்டங்களில் காட்டெருமைகள் முகாம்

உதகை, ஜூலை 21- கோத்தகிரி பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் காட்டெ ருமைகள் முகாமிட்டுள்ளதால், தொழிலாளர்கள் அச்சம டைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெ ருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களிலும் தொடர்ந்து உலா வந்த வண்ணம்  உள்ளன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழை யின் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் புற்கள் அதிகம்  வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை உண்பதற்காக காட் டெருமைகள் குட்டிகளுடன் வந்து தேயிலைத் தோட்டங்களில்  முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வியூஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டெருமை கள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்களும், தேயிலைத் தொழிலாளர்களும் அச்சமடைந் துள்ளனர். எனவே, உலா வரும் காட்டெருமைகளால் அசம் பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு, அவற்றை வனப்பகுதிக் குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செஞ்சேரிபுத்தூர் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

கோவை, ஜூலை 21- தோட்டக்கலைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசன திட் டத்தின் கீழ் சொட்டு நீர் பாசன அமைப்பு நிறுவ சிறு, குறு விவ சாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிக ளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகின்றது.  சிறு, குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 ஹெக்டர் வரை யிலும், இதர விவசாயிகள் 5 ஹெக்டர் வரையிலும் பயன் பெற லாம். அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், தமிழ்நாடு விவசாய நிலங்கள் நீடித்த பசுமை  போர்வைக்கான இயக்கத்தின் கீழ், கோவை அருகே உள்ள  செஞ்சேரிபுத்தூரில் விவசாயி வி.ஈஸ்வரி என்பவரின் 8 ஏக்கர்  நிலத்தில் 1500 மலை வேம்பு மரக்கன்றுகளை நடவு செய்யப் பட்டுள்ளது. மேலும், ரூ.15 ஆயிரம் மோட்டார் மானியம் பெற்று நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.45 ஆயிரம் மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று ஆய்வு மேற்கொண் டார். இதைத்தொடர்ந்து பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில், சின்னபுத்தூரைச் சேர்ந்த பட்டு விவசாயி ப.மாணிக்கம் என்ப வரின் 3.50 ஏக்கர் நிலத்தில் ரூ..31,500 மானியத்தில் நடவு செய் யப்பட்ட மல்பெரி தோட்டத்தில் ஆய்வு செய்தார். ரூ.87,500  மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பு மனை, ரூ.52,500 மதிப்பிலான தளவாட பொருட்கள்  ஆகியவை குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இம்மனை யில் 150 முட்டைத்தொகுதிகள் மூன்றாம் பருவத்தில் உள்ள  புழுக்களை பார்வையிட்டு, கூடு கட்டும் நிலை வரை உள்ள விவரங்களும், பட்டுப்புழு வளர்ப்பில் ஒருமுறை பட்டுக்கூடு  அறுவடை செய்ய ஆகும் உற்பத்தி  செலவு விவரம் மற்றும் கிடைக்கப்பெறும் வருமானம் முதலியவற்றினை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டறிந்தார்.

நீலகிரி: மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமங்கள்

உதகை, ஜூலை 21- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மின்தடை ஏற்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கின. நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. மழை குறைந்தாலும், உதகை நகர் மற்றும் சுற்றுவட்டாரத் தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது. உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இரண்டு ராட்சத மரம் விழுந் தது. தீயணைப்பு மீட்பு குழுவினர் சம் பவ பகுதிக்கு சென்று பவர் ஷா இயந்தி ரத்தின் உதவியுடன் மரத்தை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினர். மரம் விழுந் ததில் சாலையோர கடைகள், குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. அதே போல், உதகை - மஞ்சூர் சாலை, கிண்ணக் கொரை சாலை, கோரகுந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதி களில், 10க்கும் மேற்பட்ட ராட்சத மரங் கள் விழுந்து போக்குவரத்து தடைப் பட்டது. நெடுஞ்சாலைத்துறை, தீய ணைப்பு மீட்பு குழுவினர் மரத்தை அறுத்து  அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கம்பங்கள் மீது மரங் கள் விழுந்ததால் வெள்ளின்று நள்ளி ரவு முதல் பெரும்பாலான கிராமங்க ளில் மின்தடை ஏற்பட்டு, இருளில் மூழ்கி யது. போக்குவரத்து தடையால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல் லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத் திற்கு செல்ல முடியாமல் அவதிக் குள்ளாகினர்.

வல்வில் ஓரி விழா: நாமக்கலில் உள்ளூர் விடுமுறை

நாமக்கல், ஜூலை 21- கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளதால், ஆக.3 ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை பகுதியில் சங்ககாலத்தில் புகழ்பெற்ற கடை ஏழு வள்ளல் களில் ஒருவராகத் திகழ்ந்த வல் வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன்படி, நடப்பாண்டில் ஆக.2, 3 ஆகிய தினங்களில் வல் வில் ஓரி விழா கொண்டாடப்பட வுள்ளது. மேலும், அரசின் பல் துறை பணிவிளக்க கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா விழா மற்றும் வாசலூர்பட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க்கண் காட்சி ஆகியவை இவ்விழாவின் போது நடைபெறவுள்ளது. இவ் விழாவிற்காக நாமக்கல் மாவட் டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர் கள் மற்றும் பல்வேறு துறை பணி யாளர்கள் ஆகியோர் குடும்பத்து டன் கொல்லிமலை பகுதிக்கு வந்து செல்வார்கள். எனவே, ஆக.3 ஆம் தேதி யன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறு வனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஆக.12 ஆம் தேதியன்று (சனிக் கிழமை) பணி நாளாக அறிவிக்கப் படுகிறது. மேலும், இவ்விடுமுறை யானது வங்கிகளுக்கு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூலை 21- ராசிபுரம் வேளாண் உற் பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் வியாழ னன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. இந்த ஏலத்திற்கு  1029 மூட்டை பருத்திகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆர்.சி.எச். பருத்தி குவிண் டால் ரூ.5 ஆயிரத்து 689 முதல் ரூ.6 ஆயிரத்து 789 வரை யில் விற்பனையானது. மொத் தம் ரூ.22 லட்சத்திற்கு வர்த்த கம் நடைபெற்றது. ஏலத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.