districts

img

நரிக்குறவர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க ஆட்சியர் உறுதி

திருப்பூர், ஜன.5- உடுமலைப்பேட்டை பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த  செங்கோட்டையன் என்பவரை அடித்து கொலை செய்த மரணத்திற்கு இழப்பீடு தொகை வழங்கக் கோரியும், காயமுற்ற குமாருக்கு இழப்பீடு தொகை வழங்கக் கோரியும், செங்கோட்டையன் குடும்பத்தில் அவரது மகனான மாணிக்கத்திற்கு  அரசு வேலை வழங்க கோரியும்  திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் பொள்ளாச்சி தாலுகா செயலாளர் அன்பரசன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர் வெள்ளியன்று மனு அளித்தனர்.  ஆட்சியர் கிறிஸ்துராஜ் மனுவைப் பெற்றுக் கொண்டு உடனடியாக இழப்பீடு தொகையும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசு பணியும் தருவதாக உறுதியளித்துள்ளார்.