திருப்பூர், நவ. 28 – திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வழியாகத் திறந்து வைக்கிறார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் இக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு காணொளி வழியாகத் திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.பொன்முடி, எஸ்.முத்துசாமி, மு.பெ.சாமி நாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்ப னவர், திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், மேயர் ந.தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.