districts

img

பிரிட்டிஷ் அரசு செய்யத் துணியாததை ஒன்றிய பாஜக அரசு செய்கிறது: ஜி.சுகுமாறன் பேச்சு

திருப்பூர், ஜூலை 26 - இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்திய அரசு  கூட உணவுப் பொருட்களுக்கு வரி போட வில்லை. ஆனால் பாஜக அரசு அரிசி,  எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்க ளுக்கு ஜிஎஸ்டி வரி போட்டுள்ளது என்று  சிஐடியு தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் குற்றஞ்சாட்டினார். திருப்பூரில் பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளன தமிழ் மாநில மாநாட்டை செவ்வாயன்று தொடங்கி வைத்து ஜி.சுகு மாறன் பேசினார். அப்போது அவர் கூறியதா வது: 

நவீனமயத்தில் புதிய உத்தி 

தற்போது நாம் பயன்படுத்தி வரும் அலை பேசிகள் 2030ஆம் ஆண்டு பயனற்றதாக மாறி விடும். ஆறாவது தலைமுறை அலைபே சிகள், நாம் அணியும் கண் கண்ணாடியுடன் ஒரு கருவியைப் பொருத்தி நாம் நினைப் பதை செயல்படுத்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்று  வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே போல் தொழில் துறையிலும் பல மாறுதல்கள்  ஏற்பட்டு வருகின்றன.  புதிய கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள், நவீனம் வந்த பிறகு தொழிலாளர் எண் ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. ஆனால் எல்லா தொழிலிலும் இது போன்ற  நிலை இல்லை. சிமெண்ட், சர்க்கரை ஆலைகளில் ஆட்கள் எண்ணிக்கை குறைந் திருக்கிறது. ஆனால் பஞ்சாலை தொழிலைப்  பொருத்தவரை நவீனங்கள் வந்த பிறகும்  தொழிலாளர் எண்ணிக்கை குறையவில்லை.  தமிழகத்தில் 2 லட்சம் தொழிலாளர்கள் பஞ்சா லைகளில் வேலை செய்கின்றனர். ஆனால் இப்போது தொழிலாளர்களை சந்திக்க முடிகி றதா? தொழிலாளர்களைத் திரட்ட புதிய உத் தியைக் கையாள வேண்டியிருக்கிறது. தொழிற்சங்கத்தின் வளர்ச்சி அதில்தான் இருக்கிறது. 

அதிகரிக்கும் நெருக்கடி

கொரோனாவுக்குப் பிறகு உலகம் முழு தும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உற்பத்தி சரிந்து பொருளாதாரம் பெருமளவு பின்தங்கிவிட்டது. இப்பிரச்சனை கொஞ்சம்  முடிவுக்கு வரும் நிலையில் உக்ரைன் ரஷ்ய  போர் தொடங்கி விட்டது. அமெரிக்காவில் 40  ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான விலை  உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் விலைவாசி உயர்வு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இது ஆட்சியாளர்களுக்கு எதி ரான அதிருப்தியை அதிகரித்து வருகிறது. இலங்கையில் புதிய பொருளாதார கொள்கை முழுமையாக அமல்படுத்தப்பட் டது. அங்கு மொழி அடிப்படையில் சிங்களர்,  தமிழர் என்ற பிரிவினையை அரசே ஏற்படுத்தி யது. விவசாயத்தில் மாறுதல் செய்வதாக இயற்கை விவசாயத்தை மட்டுமே ஊக்குவித் ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அந்நியச் செலாவணி ஈட்டும் ஒரே துறையான சுற்றுலா  துறை கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்கு லைந்தது. இதன் விளைவாக விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள் ளப்பட்டனர். அவர்கள் இப்போது ஆட்சியா ளர்களை விரட்டி விட்ட நிலை ஏற்பட்டுள் ளது. 

இங்கும் இலங்கை நிலை

இந்தியாவிலும் இதே நிலைதான் உள் ளது. இலங்கையில் மொழியை பயன்படுத்தி  பெரும்பான்மை, சிறுபான்மை என மக்க ளைப் பிரித்ததைப் போல, இந்தியாவில் ஆட் சியாளர்கள் மதத்தைப் பயன்படுத்தி பெரும் பான்மை, சிறுபான்மை என மக்களைப் பிரிக் கின்றனர். இந்தியாவில் வெளிநாட்டு மூலத னம் வேகமாகத் திரும்பிச் செல்லும் நிலை  உள்ளது. இதன் காரணமாக டாலர் கையி ருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்திய  ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறது. இலங் கையில் நடக்கும் நிலை இந்தியாவில் நடக் காது என்று நாம் சொல்ல முடியாது.

கார்ப்பரேட்மய அரசு

இந்தியாவில் அனைத்து பொதுத்துறை  நிறுவன சொத்துகளும் கார்ப்பரேட்டுக ளுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. துறைமு கங்களை ஒவ்வொன்றாக அவர்களுக்கு கொடுத்து வருகின்றனர். மும்பை துறைமு கத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கொடுத் தார்கள். அந்த துறைமுகத்தை வாங்க ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி  ரூ.7115 கோடி கடன் கொடுத்தது. கடைசியில்  அந்த கடனை ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாகக் கட்ட முடிய வில்லை என்று சொல்லி, அரசு ரூ.7115 கோடி  கடனை தள்ளுபடி செய்துவிட்டது. மக்கள்  வங்கியில்  சேமித்து வைத்த பணத்தை கார்ப்ப ரேட்டுகளுக்கு கடன் கொடுத்து விட்டு, அதை  அவர்கள் கட்ட முடியவில்லை என்று அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானியர்கள் கடன்  வாங்கினால் விடுவார்களா?

தகர்க்கப்படும் தொழிலாளர் சட்டங்கள்

நூற்றாண்டு போராடிப் பெற்ற தொழிலா ளர் உரிமை, தொழிற்சங்க சட்டங்களை மாற் றுகிறார்கள். தொழிற் தகராறு சட்டத்தை தொழில் உறவு சட்டம் என மாற்றுகிறார்கள். எந்த முதலாளி உடனாவது தொழிலாளர்கள் சுமூகமான உறவு கொள்ள முடியுமா? அரசு கார்ப்பரேட்டுகள் விருப்பத்துக்கு ஏற்ப சேவை செய்யக்கூடிய இடத்தில் இருக்கிறது. அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண் டும் என இளைஞர்கள் எதிர் காலத்திற்காகப்  போராடினால் அரசு ராணுவம் உள்பட அனைத்திலும் ஒப்பந்த முறையை புகுத்து கிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை,  வருமானம் இல்லை என்றால் அதில் ஒரு  பகுதியினர் சமூக விரோதிகளாக மாறிவிடக்  கூடிய நிலை ஏற்படும். அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் நான்காண்டுகளுக்குப் பிறகு வேலையில்லாமல் வெளியேற்றப்பட்டால் சமூக விரோதிகளாக, ஆர்எஸ்எஸ் அமைப் பின் குண்டர்களாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உணவு பொருளுக்கு ஜிஎஸ்டி

பிரிட்டிஷ் அரசு கூட செய்யத் துணியாத  காரியத்தை தற்போதைய ஒன்றிய அரசு செய் துள்ளது. அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி போட்டுள்ளனர். எல்லா தொழி லையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இந்த அரசு செயல்படுகிறது. இதை எதிர்த்து தொழிலாளர்களை அணிதி ரட்ட வேண்டும். நம் பலத்தை அதிகரிக்க வேண்டும். நாடு 75ஆம் ஆண்டு சுதந்திர தினத் தைக் கொண்டாடும் நிலையில் ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவு கூர்ந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி இயக் கம் நடத்தவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி  சுதந்திர தினத்தை அனைத்து தொழிற்சங்கங் களுடன் இணைந்து கொண்டாடவும் சிஐடியு  முடிவு செய்துள்ளது.இவ்வாறு ஜி.சுகுமாறன்  கூறினார்.