districts

img

காலை உணவுத் திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

திருப்பூர், ஆக.25- திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை  உணவுத் திட்டம் வெள்ளியன்று விரிவு படுத்தி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரத்து 81 பள்ளிகளில் 75 ஆயிரத்து 482 மாணவ, மாணவிகள் பலனடைவர். திருப்பூர் மாவட்டத்தில் காலை உண வுத்திட்டம் தொடக்க விழா காங்கேயம் வட்டம் சின்னமுத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளி மாணவர்களுக்கு உணவு பரி மாறி இத்திட்டத்தைத் தொடங்கி வைத் தார். அதேபோல் அனுப்பர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் கே.சுப்பரா யன் எம்.பி., மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் காலை உண வுத்திட்டம் முதல் கட்டமாக குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 77 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1429 மாணவ, மாணவியர் கள் பயன்பெற்று வருகின்றனர். இரண் டாம் கட்டமாக, திருப்பூர் மாவட்டத் திலுள்ள 251 கிராம ஊராட்சிகளில் 797 பள்ளிகளில் பயிலும் 37 ஆயிரத்து 18 மாணவ, மாணவியர்களுக்கும், 14 பேரூ ராட்சிகளில் 95 பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 555 மாணவ, மாணவியர்க ளுக்கும், 6 நகராட்சிகளில் 59 பள்ளி களில் பயிலும் 5 ஆயிரத்து 648 மாணவ, மாணவியர்களுக்கும் நகராட்சி மத்திய சமையல் கூடம் மூலம் இரண்டு பேரூ ராட்சிகளுக்கு உட்பட்ட 10 பள்ளிகளில் பயிலும் 784 மாணவ, மாணவியர்களுக் கும் மற்றும் மாநகராட்சியில் உள்ள 120  பள்ளிகளில் பயிலும் 27 ஆயிரத்து 477 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் ஆயிரத்து 81 பள்ளிகளில் தொடங்கப்பட்டு 75 ஆயிரத்து 482 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.