districts

img

காலை சிற்றுண்டி திட்டம் சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தருமபுரி, மே 29- காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத் தினர் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு இயக்கம் திங்களன்று நடைபெற்றது.  சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை  ஊதியத்தை தமிழ்நாடு  அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச் சர் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். 40 ஆண்டு களாக செயல்பட்டு வரும் சத் துணவு திட்டத்தை தனியார்மய மாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். சத்துணவு, பள்ளிக்  கல்வித் துறையில் உள்ள காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.காவேரி தலைமை ஏற்றார்.  மாநில செயலாளர் பெ. மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் கே.தேவகி, மாவட்ட நிர்வாகிகள் ஜே.அனுசுயா, ஜி.வளர்மதி, எம். இராமன், எஸ்.மஞ்சுளா ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கி பேசி னர். தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாநில துணைத்தலை வர் கோ.பழனியம்மாள், மாவட்ட  செயலாளர் ஏ.சேகர், மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ஜெவேல், குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டபொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.

கோவை

இதேபோல் சத்துணவு ஊழியர்  சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் திங்க ளன்று நடைபெற்றது.  இந்த போராட்டத்திற்கு சத் துணவு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கே.என். ராமசாமி தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி கோவை  மாவட்ட செயலாளர் என்.பழனி சாமி,  சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே. பழனிசாமி,  மாநிலச் செயலாளர் ஜெ.நிர்மலா, மாநில செயற்குழு உறுப்பினர் அம்சவேணி, அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. செந்தில்குமார் ஆகி யோர் சிறப்புரையாற்றினார்.  போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.ஜெகநாதன், தொழிற் பயிற்சி அலுவலக உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் கே.ரவி,   தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தி, பேரூ ராட்சி ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் எம்.சாமிநாதன் உள்ளிட் டோர் ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார். போராட்டத்தை யடுத்து, கோவை மாவட்ட ஆட்சிய ரை சந்தித்து கோரிக்கை மனு அளித் தனர்.  மாவட்ட பொருளாளர் பா. சுதா  நன்றி கூறினார்.