தருமபுரி, ஜூன் 24- தருமபுரி அரசு கலைக் கல்லூரி திடலில் மாபெ ரும் புத்தக திருவிழா வெள் ளியன்று துவங்கியது. தருமபுரி மாவட்ட நிர் வாகம் மற்றும் தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகால யம் சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை புத்தக திரு விழா நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 9 மணிவரை புத்தக கண் காட்சி செயல்படும். 100 புத்தக கடைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழா வில் சுமார் 10 லட்சம் புத்தங்கள் இடம்பெற் றுள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று துவங்கிய புத்தக திருவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். தகடூர் புத்தக பேரவை செயலாளர் இரா.செந்தில் வரவேற்ரையாற்றினார். புத்தக திருவிழாவை மாநில வேளாண் மற்றும் உழ வர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் திறந்து வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் பென் னாகரம் ஜி.கே.மணி, தருமபுரி எஸ்.பி.வெங் கட்டேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவ லர் சு.அனிதா, சார் ஆட்சியர் சித்ரா விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங் கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசே கரன், தகடூர் புத்தக பேரவை நிர்வாகிகள் எம்.கார்த்திகேயன், தங்கமணி, ராஜசேக ரன், செங்கண்ணன், பாரதி புத்தகாலய நிர் வாகி அறிவுடைநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். தகடூர் புத்தக பேரவை தலை வர் இரா.சிசுபாலன் நன்றி கூறினார்.