districts

img

நாட்டை காப்பாற்ற பாஜக-வை விரட்ட வேண்டும்

கோவை, மார்ச் 14-  மக்களின் மத உணர்வுகளை பயன்படுத்தி அதிகாரத்தை பிடிக் கும் பாஜகவை விரட்டி நாட்டை  காக்க வேண்டும் என தொல்.திருமா வளவன் எம்.பி., தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அவர் கூறு கையில், அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங் களில் வெற்றி பெற்றுள்ளது. அதை வைத்து தென் இந்தியாவிலும் ஆட் சியை பிடிப்போம் என்கிறார்கள். அதேநேரம், ஏற்கனவே ஆண்ட  மாநிலங்களில்தான் மீண்டும் ஆளும் வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த தேர்தலை விட சரி வையே கண்டுள்ளது பாஜக. உ.பி-யில் கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது. மத உணர்வுகளை பாஜக  அரசியலுக்காக பயன்படுத்துகி றது. இது மிகவும் அச்சுறுத்தலான செயல். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பாஜக பேசவில்லை. அதற்கு மாறாக ஜெய்ஸ்ரீராம் என்றும் இஸ்லாமிய எதிர்ப்பு மூலமும் மக்களை திசை திருப்ப பார்க்கிறது. மதச்சார் பற்ற கட்சிகள் அகில இந்திய அள வில் ஒன்றிணைய வேண்டும். இன் னொரு முறை பாஜக ஆட்சிக்கு வரு வதற்கு மற்ற கட்சிகள் வாய்ப்பளிக் கக் கூடாது. நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், பாஜகவை விரட்ட வேண்டும். அதற்கு ஈகோவை பார்க்காமல் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண் டும். இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்ட காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகள் ஒன்றுசேர வேண் டும். மதசார்பற்ற முற்போக்கு கூட்ட மைப்பினரும் ஒன்றிணைய வேண் டும் என்பதே நடந்து முடிந்த ஐந்து  மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. ஆணவ படுகொ லைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண் டும். மாநில அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதால் முதல்வர்  இதற்கு நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். பாஜக ஆணவ கொலை களுக்கு துணை நிற்கிறது. கோகுல் ராஜ் கொலை வழக்கில் கொடுக் கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.