திருப்பூர், அக். 5 - திருப்பூரில் குடியிருப்பு உருவாகி 25 ஆண்டுகள் ஆகியும் சாலை, சாக்கடை கால் வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், உடனே அந்த வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற் றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 3ஆவது மண்ட லத்திற்கு உட்பட்ட 47ஆவது வார்டு மகாலட் சுமி நகர், விஐபி கார்டன் பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றன. இப்பகுதிகளைச் சேர்ந்தோர் வியாழ னன்று நல்லூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதி 1998 ஆம் ஆண்டு உருவானது. இந்த 25 ஆண்டு களில் இப்பகுதியில் சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி என எந்த ஒரு அடிப் படை வசதியும் இல்லை. பக்கத்தில் இருக் கும் பகுதிகளில் இந்த வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஆனால் எங்கள் பகுதிக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? அடிப்படை வசதிகள் இல்லாததால் இங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு விதத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இங்கு சாக்கடைகளில் தேங்கும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கிறது. அதேபோல் தெரு விளக்கு வசதி இல்லாத தால் இரவு நேரங்களில் இருளில் சாலைக ளில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது குறித்து பலமுறை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே எங்கள் பகுதிக்கு சாலை வசதி, தெரு விளக்கு மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, குப்பைகளை முறையாக அகற்றுவ தற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பதாகக் கூறினர். இப்ப குதி பொதுமக்கள் நல்லூர் மண்டல அலுவல கத்தில் உதவி ஆணையாளர் வினோத்திடம் கோரிக்கை மனு அளித்து அடிப்படை வசதி களை நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலி யுறுத்தினர்.