districts

ஈரோடு தேர்தல் களத்தில் தென்படாத தமாக

நாமக்கல், ஏப்.5- தமிழகத்தில் தேர்தல் களம்  சூடுபிடித்து, அனல், கனல் வீசிக் கொண்டிருக்கிற நிலையில், பாஜக வுடன் கூட்டணி அமைத்து ஈரோடு தொகுதியில் போட்டியிடும் தமாக  இன்னும் பிரச்சாரத்தையே துவக் காமல் இருப்பது பாஜக, பாமக, தமாக கூட்டணியின் பலவீனம் அம் பலப்பட்டு நிற்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, பரிசீலனை செய்து  வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள் ளப்பட்டு, வேட்பாளர்கள் தீவிர  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேநேரத்தில், பாஜக, பாமக,  தமாக கூட்டணியில் ஈரோடு மக்க ளவை தொகுதியில் தமாக வேட்பா ளர் விஜயகுமார் அறிவிக்கப்பட் டார். அறிவித்த நாள் முதற் கொண்டு தற்போது வரையில் தேர் தல் களத்தில் தமாக இருப்பதற் கான அறிகுறியே தென்படவில்லை  என்பதே அரசியல் ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது. தமிழக மக்கள் பாஜகவை தீண்டத்தாக கட்சியாகவே பார்க்கும் மன நிலை யில் இருக்கின்றனர். வடமாவட் டங்களில் சில பகுதிகளில் செல் வாக்கு செலுத்திய பாமக தற் போது, பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு இருக்கும் தொண் டர்களும் சோர்ந்து சொந்த வேலை  பார்க்க சென்று விட்டனர். தமாக விற்கு என எந்த, சொந்த செல்வாக் கும் எங்கும் இல்லை என்பதே எதார்த்த நிலை. இவ்வளவு பலவீ னங்களையும் ஒருங்கே கொண்டு ஈரோடு மக்களவைக்கு தமாக போட்டியிடுகிறது.  இந்நிலையில் ரோசத்திற்கு போட்டியிட்டாலும் குறைந்தபட்ச வாக்குகளையாவது வாங்க வேண் டும் என்கிற சுயேட்சை வேட்பாளர்க ளுக்கே இருக்கும். ஆனால், அது  கூட இல்லாமல் களத்திற்கே வரா மல் இருப்பதன் பின்னனியில் எப் படி பிரச்சாரத்தை துவக்குவது என் பதே அறியாமல் இருப்பது தற் போது தெரிவந்துள்ளது. தமாக வேட்பாளர் கூட்டணி நிர் வாகிகளை சந்திக்கும் கூட்டத்தில்,  பாஜக மாவட்டச் செயலாளர் சரவ ணராஜன், பாஜக அரசின் சாதனை களை தொகுதி முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்கி றார். மற்றொரு தரப்பினரோ வாக் காளர் பட்டியல் சரிபார்க்கிற வேலையை முதலில் செய்ய வேண் டும் என்கிறார். நட்சத்திர பேச்சாளர் கள் அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என மற்றொ ருவர் சொல்ல இப்படியே சென்று கொண்டிருக்கிறது கூட்டம்.  ஆனால் உண்மையில், தேர்தல்  களத்தில் பணியாற்ற, இந்த பாஜக,  பாமக, தமாக கூட்டணியில் யாரும்  இல்லை என்கிற நிலையில்தான், பெயரளவிற்கு இருக்கும் நிர்வா கிகளும் பிரச்சாரத்தில் இறங்கு வதற்கு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.  அதேநேரத்தில் இந்தியா கூட் டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் கூட் டணி கட்சியினர் ஆதரவோடு வெகு  உற்சாகமாக வாக்கு சேகரிப்பு  இயக்கத்தை மேற்கொண்டிருக் கிறார். பல இடங்களில் வாக்கு சேக ரிப்பா, பேரணியா என பிரம்மிக்கும்  வகையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று வருவது திமுகவின்  வெற்றியை உறுதி செய்திருக்கி றது.