districts

img

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு, மே 16- நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 10  ஆயிரம்  ஜவுளி நிறுவனங்கள் திங்களன்று வேலை நிறுத்தத்தை துவங்கிய நிலையில் ரூ.200 கோடிக்கு உற் பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.  பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவு ளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.76 ஆயிரமாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்துள் ளது.  இதுபோல் நூல் விலையும் உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமான தால் நூற்பாலைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. விலை யேற்றத்திற்கு தீர்வு காணும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் திங்கட்கிழமை முதல்  2 நாட்களுக்கு ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்திற்கு அறை கூவல் விடுத்திருந்தன.  

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் தலைமையில் ஜவுளி சந்தை கள், நூல் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தவிர பிளீச்சிங், பிராசசிங், கேலண்டரிங் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், சுமை தூக்கும் தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக என்எம்எஸ் காம்பவுண்டு, காமராஜ் வீதி, டிவிஎஸ் வீதி, சொக்கநாத வீதி, ராமசாமி வீதி, கனி  மார்க்கெட், அசோகபுரம், சென்ட்ரல் திரையரங்கு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக் கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.  இதுபோல் மாவட்டத் தில் சென்னிமலை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட் டம் முழுவதும் 10 ஆயிரம் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சிதம்பர சரவணன் கூறியதாவது: பஞ்சு மற்றும் நூல்  ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசியப் பட்டியலில் சேர்க்க வேண்டும். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 10 ஆயிரம் ஜவுளி சார்ந்த உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.200 கோடி வரை உற் பத்தி மற்றும் விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. பிளீச்சிங், பிராசசிங், கேலண்டரிங் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் அதில் பணி யாற்றி வந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.