districts

img

அடாவடி செய்கிறாரா? ஆளுநர்: இளைஞர்கள் கொதிப்பு

ஆர்எஸ்எஸ் எழுதிக்கொடுத்த உரையை வாசித்து பழகிய ஆளுநருக்கு, தமிழ்நாடு அரசு எழுதிக்கொடுத்த உரையின் வார்த்தைகள் தொண்டைக்குள் அடைபட்ட முள்ளாய் குத்துகிறது. வார்த்தை வெளிவராமல் மூச்சு முட்டுகிறது. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்கிற பாரதியின் வரிகள் இவருக்கு தேளாய் கொட்டுகிறது. அரசியல்வாதிகள், அரசியல் அறிஞர்கள் ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்து வந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது ஆளுநர் நடந்து கொண்டவிதம் இளைஞர்களை போராட்டக்களத்திற்கு தள்ளியுள்ளது. இதன் எதிரொலிதான் “கெட் அவுட் ரவி” என்கிற வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதே தீவிரத்தோடு தீக்கதிர் நாளிதழுக்கு இளைஞர்கள் அளித்த பேட்டிகள் வாசகர்களின் பார்வைக்காக....

தலைவர்கள் விமர்சனம்

–சு.வெங்கடேசன் எம்.பி.,

சட்டமன்றத்திலிருந்து வெளி யேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இதே போல தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலி ருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும்: ஆர்.என்.ரவி

-கே.கனகராஜ்

இந்தியாவில் பிறந்துவிட்டு இங்கி லாந்திடம் ஓய்வூதியம் வாங்கிய சாவர்க் கரின் வாரிசு வேறு எப்படி பேசும். மாநிலங்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு, ஒன்றிய அரசுக்கு விசு வாசமாக இருக்க வேண்டும் என்பது துரோகம் இல் லையா மிஸ்டர் ரவி.

– சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்

சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை  அவமதித்தவர், இப்போது தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன் படுத்தாமல் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ் பவர் தமிழ்நாட்டின் இலச்சினையை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது. வெளியேறுங்கள் ரவி. தமிழ் நாடு செழிக்கட்டும்.

–ஆதவன் தீட்சண்யா

அவ்வளவு ரோஷமிருந்தால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அன்னந்தண்ணி ஆகாரம் புழங்க மாட்டேன் என்று ஆளுநர் அறிவிக்க வேண்டும்.

-ஆர்.விஜயசங்கர்

ஆளுநரின் ஒப்புதல் பெறாத உரை என்று வானதி சீறுகிறார். உரையின் வரைவை ஏற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறார் என்பதற்கான சான்று. அந்தக் கடைசிக் கையெழுத்து அவரது அட்மின் போட்டதாக இருக்குமோ?

கல்கி, திருப்பூர்

இவர் தமிழ்நாட்டின் ஆளுநர் என்பதையே மறந்து  பாஜகவினர் போல் செயல்படுகிறார். ஆளுநர் எதிர்க் கட்சித் தலைவர் வேலையை செய்கிறார். தன் மீது வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் நபர் ஆளுநர் பதவிக்கு தகுதியானவர் தானா என்பதுதான் இப்போது என்னுடைய கேள்வியாக உள்ளது.

பாரதி, திருப்பூர்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் அவசர அவசரமாக வெளி யேறியதற்கு காரணம் ஆர்எஸ்எஸ் கூட்டம்இருந்திருக்கலாம் அதுதான் போயிட்டாரு. வேற ஏதாவது  பாஜக ஆளும் மாநிலத்துக்கு மாத்துவதற்காக இப்படி பன்னுகிறார் போல.

வி.எம்.பிரபாகரன்:

தமிழக சட்டமன்ற கூட்டத்திலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார் என்ற  செய்திகளை நான்  இதுவரை யிலும்  கேட்டதில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போதே ஆளுநர் வெளியேறியது துரதிஷ்டமானது. அரசியல் மாண்பு தெரிந்தவர்கள் யாரும் இத்தகைய செயல்களை செய்ய மாட்டார்கள். 

ரேகா

சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட உரையை அவர் முழுமையாக படிக்காமல் அரைகுறையாக பாதி மட்டுமே படித்தி ருக்கிறார். உள்நோக்கத்துடனே இதை அவர் செய்தி ருக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அவ ருக்கு கண்டனம் தெரிவித்ததை சரியானதாகவே நான் பார்க்கிறேன்.

கதிர்வேல்

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நாடு முழுவதும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில், ஆளுநருக்கும் அந்தந்த பகுதி ஆளுங்கட்சிக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத் தில்,  கிரன்பேடி கூட புதுச்சேரி மாநில அரசை முழுமை யாக இயங்க விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார். அதே போல தமிழகத்திலும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதன் பின் னணியில் பாஜக செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

காயத்ரி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரம்பம் முதலே  திமுக அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். இதற்கு முன்னதாக கூட தமிழ்நாடு என  குறிப்பிடாமல் தமிழகம் என்றே குறிப்பிட்டு பேசி வரு கிறார். ஆளுநர் உரை குறித்த முழுமையான தொகுப்பு அவருக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திட்டமிட்டே ஆளுநர் உரையில் பெரும்பான்மையான வாக்கியங்களை தவிர்த்து, தனக்கு பிடித்தது போல் பேசிவிட்டு, சட்டமன்ற விதிகளுக்கு மாறாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. 

கோகுல்

தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தமிழக சட்ட மன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்க செயலாக உள்ளது. சட்ட மன்ற வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவத்தை நாங் கள் கேள்விப்பட்டது இல்லை. வன்மையான கண்டனத் திற்குரியது. அவை நடக்கும்போது வெளியேறியது ஜன நாயக விரோத செயல்.

முத்து

தமிழக ஆளுநர் தொடர்ச்சியாக தமிழகத்தில் மக்களுக்கு எதி ரான கருத்துகளையே கூறி வருகிறார். உயர்கல்வி நிலையங்கள் பொது மேடைகள் என அனைத்திலும் குறிப்பிட்ட மதவாத கருத்துக்களை புகுத்தும் செயலை மட்டுமே செய்து வருகிறார். சமூக நீதிக்கு எதிராக அவரின் செயல்பாடுகள் இருந்து வரு கிறது. பல்கலைக்கழகங்கள் முதல் ஆளுநர் அலுவலக செயல்பாடுகள் வரை இந்துத்துவா கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. அதேபோல் தான் தற்போது தமிழக சட்டமன்றத்தில் அவரின் செயல்பாடு என்பது மிகுந்த கேவலத்தை ஏற்படுத்தி உள்ளது.

டார்வின்

தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளு நரின் செயல்பாடு ஏதோ மதவாத சக்திகளுக்கு துணை போவது போல தெரிகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களையும் அவர் அது போல தான் வழி நடத்துவதாகவும் நாங்கள் கருதுகிறோம். தமிழக ஆளுநர் மதவாத சாதியவாத பின்புலத்தில் செயல்படுவது தெள்ளத் தெளி வாக தெரிகிறது என்பது எனது முதன்மையான கருத்து. மாணவர்களின்  கருத்தாகவும் இது மேலோங்கி வருகிறது. எனவே. தமிழக ஆளுநர் ரவியை  ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதே நிலை நீடித்தால் கல்வி நிலையங்களில் ஆளுநருக்கு எதிரான முழக்கங்கள் அதிக ரிக்கும்.

கல்பனா

இந்தியா பல்வேறு மொழி கலாச்சாரத்தை பின்பற் றக்கூடிய ஜனநாயக நாடு. ஆளுநர் என்பவர் நம் மாநில மக்களின் மொழிப்பற்று, இனப்பற்று, பண்பாடு கலாச் சாரத்தை உணர்ந்து செயல்படக்கூடிய நபராக இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் பதவியில் இருந்து  கொண்டு அடிப்படை கூட தெரியாமல் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுவது நகைப்பிற்குரியது. இங்கே ஒன்றிய அரசு பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் ஆளாத மாநிலங்கள் என்று  பிரித்து  ஆளுநரை வைத்து ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தும் நம் வரலாறை புரிய வைக்க  வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. நாடு தமிழ்நாடு அதை நாடா விட்டால் திரும்பி ஓடு என்பதே என் கருத்து.

சினேகா.பா.நி

ஆளுநர், தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரை யைத் தான் படிக்க வேண்டும் இதுதான் அரசியல் மரபு. ஆனால் ஒன்றிய அரசுக்கு துணை நிற்கும் ஆளுநர் ரவி அரசியல் மரபையே முறியடித்துள்ளார். ஆளுநர் என்பவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவாறு  கருத்துக்களைப் பகிர வேண்டும். இந்த  விதிமுறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள் ளது. ஆனால் ஆளுநர் ரவி அவர்கள், ஆரம்பத்திலிருந்தே பாசிச பாஜக அரசுக்கு சாதகமான கருத்துக்களையே பகிர்ந்து வருகிறார். இது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஆக சமூக நீதியைப் பின்பற்றும் தமிழக மக்களான எங்களுக்கு சனாதானக் கொள்கை உடைய ஆளுநர் தேவையில்லை.

பிரசாந்த்

அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஆளுநர் அரசியலமைப்பிற்கு எதிராக ஆர்எஸ்எஸ்ன் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவர் தமிழ்நாடு சட்டமன்றத்தை மட்டும் அலட்சியப்படுத்த வில்லை, சட்டமன்றத்தை ஓட்டுப்போட்டு தேர்வு செய்த 7  கோடி மக்களையும் அலட்சியப்படுத்தி இருக்கிறார்.

அசாருதீன் 

சமூக நீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை, பெரி யார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர்  காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகிய பகுதிகளை  தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவியை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநர் பொதுமேடையில் பேசு வது போல சட்டபேரவையில் பேசியுள்ளார். அரச மைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்துக்கு தலைமை  வகிக்கக்கூடிய ஆளுநரே அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடந்தி ருப்பது வன்மையான கண்டத்திற்குரியது.

தலைவர்கள் விமர்சனம்

-பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

சட்டமன்ற மரபுகளை மதிக்கா மல் விதிமுறைகளை மீறும் வகை யில் நடந்து கொள்ளுகின்ற ஆளு நர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கின்ற செய லில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை சம்ப ளமாக பெற்றுக்கொன்டு,  ஆர்எஸ்எஸ் ஊழியரைப்போல பேசி வருகிறார். சட்ட மன்ற மரபுகளை மீறி சட்டவிரோதமாக, நடைபெற்று கொண்டிருந்த கூட்டத்தை விட்டு போவதற்கு எந்த தார் மீக உரிமையும் இல்லை.மாறாக ஆளுநர் பதவியை  ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாட்டை விட்டே  வெளியே போகட்டும்; எவரும் வருத்தப்பட போவ தில்லை.

-பேரா.அருணன்

தமிழ்நாடு அரசு இலச்சினையை பயன்படுத்தாத ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசிடமிருந்து ஊதியம் பெறலாமோ? ரோஷக்காரர் என்றால் பெற மாட் டார்!

–பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் தற்போது அரசியல்வாதியைப் போல நடந்து கொண்டிருக்கிறார். அவருடைய முதலாளிகளுக்கு இந்த தேர்தலை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற பயம் பற்றிக்கொண்டிருக்கிறது. மதிப்பிற்குரிய ஆளுநர் தன்னுடைய பதவியிலி ருந்து விலக வேண்டும். அவருடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

–தோழர் மருதையன்.

ஆளுநருக்கு சட்டமன்றத்தில் வழங்கப்பட்ட ‘மரியாதையை’ மக்கள் மன்றத்திலும் வழங்குவோம்! இனி பொது நிகழ்ச்சிகளில் ரெவி பேச எழுந்தால் கூட்டத்தில் 10 பேராவது #GetOut – RSS – Ravi என்று கருப்புக்கொடியுடன் முழங்குவோம்! இதை செய்வது எல்லா கட்சிகள், இயக்கங்களின் கடமை!

தொகுப்பு:

          எழில், லிவின், கார்த்திக், பிரபாகரன்.