நீலகிரி மலைத்தொடரின் வடக்குச் சரிவில், மாயாற்றின் கரையில் அமைந் துள்ள குக்கிராமம் தெங்குமரஹடா. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத் தில் தெங்குமரஹடா அமைந்திருந் தாலும் இப்பகுதிக்கு ஈரோடு மாவட் டம், பவானிசாகர் வழியாகத்தான் செல்ல வேண்டும். பவானிசாகர் அணைக்கட்டை அடுத்துள்ள காராச்சி கொரை வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவுக்கு புதர்களும், வனங்க ளும் நிறைந்த காட்டுப்பாதையில் சென்றால் பவானி அணையின் முக் கிய நீராதாராகமாக விளங்கும் மாயாறு உங்களை வரவேற்கும். அதன் மறுகரையில் தான் தெங்கு மரஹடா அமைந்துள்ளது.
கரையைக் கடக்க பாலம் ஏதும் இல்லாததால் அவ்வூர் மக்கள் இன்று வரை பரி சல்களையே பயன்படுத்தி வருகின்ற னர். காடு, மலை, ஆறு என பல்வேறு தடைகளைத் தாண்டி, ஒரு தனித் தீவாகவே காட்சியளிக்கும் தெங்கு மரஹடாவின் வரலாறு என்ன? 1952 ஆம் ஆண்டு தெங்குமரஹடா கூட்டுறவுச் சங்கம் என்ற விவசாயி கள் கூட்டுறவு நிறுவனம் உருவாக்கப் படுகிறது. இதில் கோத்தகிரி வட்டத் தில் உள்ள கீழ்கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 142 பேர் உறுப்பினர்களாகச் சேர்கின்ற னர்.
இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் விவசாயம் செய்வதற்காக சுமார் 500 ஏக்கர் வன நிலம் அரசால் நீண்டகால குத்தகைக்கு விடப்படுகிறது. ஏறக் குறைய இதே கால கட்டத்தில் பவானி சாகர் அணை கட்டப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு துவங்கிய அணையின் கட்டுமானப் பணிகள் 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்து, அந்த ஆண்டே அணை திறந்து வைக்கப்படுகிறது. அணையின் கட்டுமானப் பணியில் ஈடு படுத்தப்பட்ட தொழிலாளர்களில் சிலர் விவசாயப் பின்புலத்தைக் கொண்டி ருந்ததால் அருகில் இருந்த தெங்கு மரஹடா அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவர்களில் சிலர் விவ சாயக் கூலித் தொழிலாளர்களாக தெங்குமரஹடா சென்று குடும்பத்து டன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றனர். இவ்வாறு கடந்த எழு பது ஆண்டுகளுக்கு முன்பு கான கத்திற்கு இடையே ஒரு கிராமமே உரு வாகியது. இவ்வாறு இடம்பெயர்ந்த வர்கள் தவிர பூர்வகுடிகளாக உள்ள குறும்பர் மற்றும் இருளர் பழங்கு டியின மக்களும் கணிசமான அள வில் வசித்து வருகின்றனர். அல்லி மாயார், கல்லம்பாளையம் மற்றும் தெங்குமரஹடா அருகேயுள்ள புதுக் காடு ஆகிய பகுதிகளில் இவர்களது குடியிருப்புகள் அமைந்துள்ளன. எதற்காக விவசாயப் பணிகளுக் காக வன நிலம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்? வேறு எங்குமே இடம் இல்லையா? எதற்காக இந்தக் குறிப் பிட்ட நிலப்பரப்பு தேர்ந்தெடுக்கப்பட் டது? இந்த வினாக்களுக்கான விடை கள் நாட்டின் பொருளாதார வரலாற் றில் பொதிந்துள்ளன.
1943 ஆம் ஆண்டு, நாடு விடுதலை அடைவதற்கு சரியாக நான்கு ஆண்டு களுக்கு முன்பாக, வங்காளத்தில் மிகப்பெரிய உணவுப் பஞ்சம் உருவா கியது. வெள்ளை ஏகாதிபத்திய அர சின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விளைந்த இந்தக் கொடும் பஞ்சம் ஒட்டுமொத்த இந்தியா விலும் கணிசமான விளைவுகளை உரு வாக்கியது. வறட்சியால் விளைந்த உணவுப் பற்றாக்குறை காரணமாக இப்பஞ்சம் ஏற்பட்டது என்று உலகை நம்ப வைக்க வெள்ளை அரசு முனைந் தது. கண்துடைப்பு நடவடிக்கையாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி யாகத்தான் மாயாற்றின் சமவெளி யில் உள்ள தெங்குமரஹடா உணவு உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தாக உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர். எல்லாப் பருவகாலங்களிலும் கிடைக் கும் மாயாற்றின் தண்ணீர் மற்றும் வளமான வண்டல் மண் ஆகிய வையே இந்தப் பகுதி தெரிவு செய் யப்படக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
அதன் பிறகு விவசாய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி சீரமைக்கவே கூட்டுறவுச் சங்கம் உரு வாக்கப்பட்டிருக்க வேண்டும். “கோத்தகிரியின் கோடநாடு பகுதி யில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலை வில் மலைச் சரிவில், காட்டுப் பாதை யில் இறங்கினால் தெங்குமர ஹடாவை அடையலாம். எங்களது மூதாதையர் அந்த வழியாகவே சென்று வந்துள்ளனர். சாலை வசதி மற்றும் வாகன வசதி பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில்தான் நாங் கள் இரண்டு மாவட்டங்களைச் சுற்றிச் செல்கிறோம்!” என்கிறார் அப்பகுதி யைச் சேர்ந்த விவசாயியான ரமேஷ். மேலும், “தொடக்கக் காலங்களில் நெல், கம்பு, சோளம் மற்றும் ராகி ஆகிய உணவு தானியங்களே அதிக அளவில் பயிரிடப்பட்டன. அண்மைக் காலங்களில் வாழை, கரும்பு போன்ற வையே விளைவிக்கப்படுகின்றன. தானிய விவசாயத்தில் எங்களுக்கு பெரிதாக லாபம் ஏதும் கிடைப் பதில்லை!” என்கிறார் அவர். தெங்குமரஹடாவில் தற்போது சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இதில் படுகர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் சுமார் 450. இது தவிர பூர்வகுடிகளான இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 250 குடும்பங்கள் உள்ளன. விவசா யம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயக் கூலித் தொழிலும்தான் இங்கு பிரதானம். பழங்குடியின மக்கள் இவற்றுடன் வனப்பொருட்கள் சேகரிப்பிலும் ஈடுபடுகின்றனர். தெங் குமரஹடாவில் அரசு உயர்நிலைப் பள்ளியும், ஆரம்ப சுகாதார நிலைய மும் உள்ளன. அல்லிமாயார் பகுதி யில் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இரண்டு பேருந்துகள் வனத்துறையின ரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் வன விலங்குகளின் சுதந்திரமான நடமாட் டத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட சில வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதி மன்றம், தெங்குமரஹடா கிராமத் தையே காலி செய்யலாமா என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கி றது. ஏனெனில், கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலை யும் இணையும் முக்கியப் பகுதியாக இப்பகுதி உள்ளதால் வன விலங்குக ளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இந்த கிராமம் மிகுந்த இடையூறாக உள்ளது என்று வனத்துறை கூறுகி றது. முதுமலை மற்றும் சத்தியமங்க லம் ஆகிய இரண்டு புலிகள் சர ணாலயங்களின் எல்லைக்குள் இந்த கிராமம் வருகிறது. “சாதாரண காப்புக் காடாக இருந்தாலே வனத்துறை யினரின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கும். இது புலிகள் சரணாலயம் என்பதால் அவர்களின் அதிகாரத்திற் கும் கெடுபிடிகளுக்கும் பஞ்சமே இல்லை!” என்கிறார் முதியவரான கணேசன். “மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் எங்களால் வெளியுலகத்து டன் தொடர்பு கொள்ளவே இயலாது. நல்ல சாலை அமைப்பதற்கும் மாயாற் றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கும் இதுவரை வனத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை. இப்படியே வாழ்ந்து பழகி விட்டோம். வசதிகள் இல்லாவிட்டா லும் பரவாயில்லை. வெளியேறச் சொன்னால் எப்படி? இதைத் தவிர வேறு ஒரு வாழ்க்கையை என்னால் கனவில் கூட நினைக்க முடியாது!” என்கிறார் அவர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிய ரசர்கள் வி. பாரதிதாசன் மற்றும் என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு மறுகுடியமர்த்தல் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது. சத்தியமங்கலம் புலிகள் சரணால யத்தின் கள இயக்குநர் தலைமை யிலான இக்குழுவில் நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றுள் ளனர். இக்குழுவினர் கடந்த மார்ச் 6 ஆம் நாள் தெங்குமரஹடா பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது கருத்துகளைப் பெற்றனர். எந்த நிவா ரணமும் அவசியம் இல்லை. வெளி யேறிச் செல்லவும் விரும்பவில்லை என்று பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்தனர். போதிய நிவாரணத்து டன் மாற்றிடம் வழங்கப்பட்டால் வெளியேற விரும்புவதாகச் சிலர் தெரி வித்தனர். இதனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந் தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அடுத்தடுத்த அமர்வுகளில் என்ன நடக்கும் என்பதே தெங்குமரஹடா மக்களின் அச்சமாக உள்ளது.
இப்போதைக்கு தெங்குமரஹடா வில் உள்ள பழங்குடி மக்களை வெளி யேற்றப் போவதில்லை என்று வனத் துறையினர் கூறுகின்றனர். அவர்க ளைத் தவிர மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதாக வைத்துக் கொண்டாலும் அதற்கான நிவாரணம் நிலமா, பணமா என்பதில் தெளிவு இல்லை. இப்போதைய நிதி நிலையில் மக்களைத் திருப்திப்படுத் தும் வகையில் அரசால் நிதி நிவா ரணம் அளிக்க முடியுமா என்ற கேள்வி யும் எழுகிறது. ஒருவேளை மாற்றுச் சமூகத்தினரை வெளியேற்றி விட்டால், மீதமுள்ள பழங்குடி மக்களுக்காக பள்ளியும், ஆரம்ப சுகாதார நிலைய மும் தொடர்ந்து இயங்குமா என்ப தும் கேள்விக்குறிதான். வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தடை கள் உள்ளதால் பழங்குடிகளை வெளி யேற்றுவது கடினம். அதேநேரம், மற்ற சமூக மக்களை முதல் கட்டமாக வெளி யேற்றிவிட்டால், பின்பு பழங்குடியின ரையும் எளிதாக வெளியேற்றி விட லாம் என்று வனத்துறையினர் கணக்குப் போடுவதாகக் கூறுகிறார் கள் வன உரிமை ஆர்வலர்கள். “வனத்தைக் காக்கும் கடவுளரா கத் தங்களைத் தாங்களே கருதிக் கொண்டு, சாமானிய மக்கள் அதற்கு எதிரிகள் என்பது போல் சித்தரித்து, அவர்களை வெளியேற்றி விட்டால் மரங்களும் வனங்களும் அடர்ந்து விடும் என்ற கற்பனையில் நீதிமன்றங் கள் உள்ளன. அண்மையில் சத்திய மங்கலம் மலைப்பாதையில் போக்கு வரத்துக்கு தடை விதித்தது உள்ளிட்ட நடைமுறையுடன் தொடர்பற்ற தீர்ப்பு கள் இந்த மனப்பான்மையைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆனால் மக்களை மையப்படுத்திய ஒருங்கிணைந்த வனக்கொள்கையே வனங்களையும், வன விலங்குகளையும் நிரந்தரமா கக் காக்கும். ஒட்டுமொத்த கிராமங்க ளைக் காலி செய்யும் ஆலோசனை களைக் கைவிட்டு, யானை வழித்தடங்களையும், சிறு உயிரினங்க ளின் வாழ்விடங்களையும் ஆக்கிர மித்துள்ள ஈஷா, அமிர்தா போன்ற கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளைக் காலி செய்யும் நடவடிக்கைகளில் நீதி மன்றம் இறங்கினால் உண்மையா கவே வனங்கள் காப்பாற்றப்படும் என்கிறார்கள் அவர்கள். -
மதுரன்