கோவை, டிச.3- மாணவர்களை திறமை மிக்க வர்களாக உருவாக்க திறமை மிகுந்த ஆசிரியர்கள் தேவை என்றும், அத னால் அவர்களுக்கு அதிகமாக ஊதியம் வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற கல்வியா ளர்கள் மாநாட்டில் கோவை ராணுவ மைய கமெண்டிங் அலுவலர் தினேஷ் சிங் தன்விர் பேசியுள்ளார். பள்ளி கல்வியில் புதுமைகள் புகுத்துவது தொடர்பான உச்சி மாநாடு கோவையில் சனியன்று நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பள்ளிகளில் புதிய தொழில் நுட்பங் களை பயன்படுத்துவது எப்படி? கல்வியை எளிமை ஆக்கும் வழி முறைகள், பாடத்தை கற்பதால் மாண வர்களுக்கு கிடைக்கும் விளைவு களை கண்டறிந்து அதற்கேற்ப பாடத் திட்டங்களை உருவாக்குவது உள் ளிட்ட 3 அமர்வுகள் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் தங்கள் கருத் துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோவை ராணுவ மையத்தின் (கோவை டெரியர்ஸ்) கமெண்டிங் அலுவலர் தினேஷ் சிங் தன்விர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் மனி தர்கள் தனித்திறனுடனும், புதிய யோசனைகளை சிந்திக்கும் திறன் உடையவர்களாக உள்ளனர். ஆனால், அதற்கு செயல் வடிவம் கொடுக்க முன் வருவதில்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்
. ஒவ்வொரு மாணவருக்கும் பொருந்தக்கூடிய செய்முறை பயிற்சிகளை அளிக்க வேண்டும். இன்றைய காலட்டத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இல்லை. ஆசிரியர் களுக்கு குறைவான ஊதியம் வழங் கப்படுவதே இதற்கு காரணம். மாண வர்களை திறமை மிக்கவர்களாக உருவாக்க திறமை மிகுந்த ஆசிரி யர்கள் தேவை. அதனால் அவர் களுக்கு அதிகமாக ஊதியம் வழங்க வேண்டும். அதிக வேலை நேரம் என்பது ஆக்கப்பூர்வமான ஒன்றாக இருக் காது. எங்கு ஒருவர் அதிக நேரம் வேலை செய்கிறாரோ, அங்கு புதிய சிந்தனைகள் தோன்றுவது மறை கிறது. சில பிரச்சனைகள் எழுகிறது. இன்றைய கால குழந்தைகள் மத்தி யில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பழக்கம் மறைந்து வரு கிறது. இது வளர்ச்சி அல்ல; மாற்றம் மட்டுமே. சொந்தங்கள், அண்டை வீட்டார் கள், தாய், தந்தை மற்றும் மூதாதை யர்களுடன் பேசுவதையே குறைத்து வருகின்றனர். பள்ளி படிப்பை கடந்து இந்த மதிப்புகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப் பெண்ணை மட்டும் கணக்கிடாமல் மாணவர்கள் எந்த நிலையையும் சமாளிக்கு மனோ தைரியத்தை வளர்க்க வேண்டும், என்றார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேசன் இயக்குநர் மோகித் கம்பீர், இபிஎஸ்ஐ ஆலோசகர் சித்தார்த் ஜெயின், கல்வி யாளர்கள் மணிமேகலை மோகன், அனுஷா ரவி, ஸ்வாதி அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.