திருப்பூர், ஜன.29- திருப்பூர் கேஎஸ்சி பள்ளி வளாகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டவர்கள் மீது அந்த நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கடைசி நாளில் பங் கேற்ற 18 பேரை பழிவாங்கும் வகையில் வெவ்வேறு பகுதிகளுக்கு அவர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இடமாறு தல் கலந்தாலோசனையின் போது அவர் களது இட மாறுதல்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய இடங்களிலேயே பணி அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டி ருந்தது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் மேற் படி 18 பேரின் மீதான இந்த நடவடிக்கைகள் முழுமையாக கைவிடப்படவில்லை. 9 பேர் மட்டுமே மீண்டும் பழைய இடங்க ளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். மற்ற ஒன்பது பேர் மீதான நடவடிக்கைகள் நீக்கப் படாமல் அதே இடத்தில் வேலை செய்யு மாறு கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரமேஷிடம் ஆசி ரியர் கூட்டணியினர் முறையிட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் வேறு சில விதிமுறைகளின்படி அந்த இட மாறுதல்கள் தொடரும் என்ற தன்மையில் பதிலளித்துள் ளார். இந்நிலையில் வியாழனன்று மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்தவர்களை திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கேஎஸ்சி அரசு பள்ளிக்கு கலந் தாய்வு நடைபெறும் இடத்திற்கு வரும்படி கூறப்பட்டது. அங்கு சென்றவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் வரும்படி அழைக்கப்பட்டனர். இவ்வாறு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப் பட்ட நிலையில் ஆவேசமடைந்த ஆசிரி யர்கள் கேஎஸ்சி பள்ளி வளாகத்தில் பழி வாங்கல் நடவடிக்கை கைவிடப்படும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து தரையில் அமர்ந்து முழக்கங் களை எழுப்பினர். பலமணிநேரம் இப்போராட்டம் நீடித்து நிலையிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வில்லை. இந்நிலையில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத் திற்கு வந்து கல்வித் துறை அதிகாரிகளை யும் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஓரிரு நாட்களில் ஜாக்டோ ஜியோ போராட்ட கால பழிவாங்கும் நடவடிக்கை யில் முழுமையாக கைவிடப்பட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் மீண்டும் பழைய இடங் களில் பணி வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக் கப்பட்டது. இந்த உறுதி மொழியை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் இந்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப் பட்டது.