உடுமலை, ஆக.31- காலை உணவு திட்டத்தை நடுநிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக ளுக்கும் விரிவு படுத்த வேண்டும். மாண வர்களுக்கு ஆசிரியர்கள் தற்பொழுது நேரடியாக பாடம் நடத்துவதால் ஆன் லைன் தேர்வு முறைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குடிமங்க லம் கிளையின் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தொடக்கல்வி மாணவர்களின் கல் வித்தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத் தும் திட்டத்தை கைவிட வேண்டும். பி.எட் மாணவர்களை கொண்டு மதிப் பீடு செய்வதை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் தேர்வு முறைகளை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை நடுநிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண் டும் மற்றும் காலை உணவுத்திட்ட வேலைகளுக்கு ஆசிரியர்களை விடு வித்து உணவு திட்ட வேலைகளை சத்து ணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குடிமங்கலம் வட்டாரத் தலைவர் ஜக்கியா அதர் தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் மகாலிங்கம் முன்னிலை வகித் தார். வட்டாரத் துணைச்செயலாளர் சம் பத்குமார் மற்றும் தியாகராஜன் ஆகி யோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். நிறைவாக எட்வின் நன்றி கூறினார்.