கோவை, டிச.17- ஜாக்டோ - ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முற் றுகை போராட்டத்தில், கோவை மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெருந்திரளாக ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட செயற் குழு கூட்டம் சனியன்று தாமஸ் கிளப் அரங்கத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் வர வேற்றார். மாவட்டப் பொருளாளர் மலர்விழி வரவு - செலவு கணக்குகளை முன்வைத்தார். இக்கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள, கோட்டை முற்றுகை போராட்டத்தில் கோவை மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெருந்திரளாக ஆசிரியர்கள் பங்கேற்க வேண் டும். கோவை கல்வி மாவட்டத்துக்குட்பட்ட மாவட்ட தொடக் கக்கல்வி அலுவலகம் தற்போது குனியமுத்தூரில் செயல் பட்டு வருகிறது. இது நகரின் மையத்தில் இல்லாமையால் ஆசிரியர்கள் அலுவலகத்திற்கு சென்று வர மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நகரின் மையப் பகுதி யிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்திலோ மாற்றிய மைத்திட வேண்டும். வால்பாறை வட்டாரத்தில் ஆசிரியர்க ளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டையை உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.