உதகை, ஏப்.4- சம்பள உயர்வு பெற்றுத் தந்த ஆ. ராசாவை பார்த்தவுடன் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உற்சாகமாக வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு நன்றி தெரிவித்தனர். நீலகிரியில் இந்தியா கூட்டணியின் சார்பில், திமுக வேட்பாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது தேயி லைத் தோட்டம் வழியாக சென்ற பொழுது தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு பெற்றுத் தந்த ஆ.ராசாவை பார்த்தவுடன் தொழிலாளர்கள் உற்சாக மாக வந்து புகைப்படம் எடுத்துக்கொண் டனர். மேலும் அரசு பேருந்துகளில் 40 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பேருந்தில் சென்று வர விடியல் பயணம் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக தேயி லைத் தோட்டத் தொழிலாளர் பெண் கள் நன்றி தெரிவித்தனர்.