உதகை, செப்.7- நீலகிரி மாவட்டத்தின் நாக்கு பெட்டா படுகர் நலச் சங்கம் சார்பில் 6 ஆவது நாட்களாக தொடரும் உண்ணா விரத போராட்டத்தால் தேயிலைத் தூள் உற்பத்தியில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகளின் கோரிக்கையை ஒன் றிய அரசு நிறைவேற்றாவிட்டால் போராட் டம் தீவிரபடுத்தப்படும் என தேயிலை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரி மாவட் டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பொருளாதாரமாக உள்ளது. தேயிலை விவசாயத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற் பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உற் பத்தியாகும் பசுந்தேயிலைக்கு 20 ரூபாய் முதல் செலவாகும் நிலையில், தற்போது 14 ரூபாய் மட்டுமே கொள் முதல் விலை வழங்கப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், இங்கு உற்பத்தி செய் யப்படும் பசுந்தேயிலைக்கு 35 ரூபாய் வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைத்து வந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்பட வில்லை எனக் கூறி நாக்குப்பெட்ட படு கர் நல சங்கம் சார்பில் நீலகிரி மாவட் டத்தின் நான்கு சீமைகளில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தேயிலை விவசாயிகள் செப் டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து 6 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் பேசிய தேயிலை விவசாயிகள், நீல கிரி மாவட்டத்தில் 160 தனியார் கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சம் கிலோ தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படு கிறது. இந்நிலையில் மாவட்ட முழுவ தும் நடைப்பெறும் தொடர் உண்ணா விரதப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு நாற்பது லட்சம் வீதம் ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டம் கார ணமாக மாவட்ட பொருளாதார ரீதியில் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு ஏற் பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும். அதேபோல் இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகள் செவிசாய்யவில்லை யெனில், நாளடைவில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வும், ஒன்றிய அரசு விரைவில் தேயி லைக்கு நிரந்தர விலை வழங்க வேண் டும், என்றனர்.