districts

img

அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப்.20- அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் வரி உயர்வு தீர்மானத்தை கண்டித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்தி யூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் வரி சீரமைப்பை  செய்யாவிட்டால் உள்ளாட்சி அமைப்பு களுக்கான நிதிகளை வழங்க முடியாது என்று ஒன்றிய பாஜக அரசு நிர்பந்தம் செய்த  காரணத்தால் தமிழக அரசு வரி உயர்வு களை பேரூராட்சி, நகராட்சி, மாகராட்சி களில் அமல்படுத்த தீர்மானங்களை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை அந்தியூர் பேரூராட்சி மன்றத்தில் சிபிஎம் 3 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.கீதா சேகர் கடுமையாக எதிர்த்தார்.  இதன் தொடர்ச்சியாக அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் சார் பில் வரி உயர்வை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் கீதாசேகர் தலைமை தாங்கினார்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிங்காரவீதி கிளை ஏ.கே.செல்வராஜ், மந்தைமாரியம்மன் கோயில் வீதி கிளைச் செயலாளர் எஸ்.ராதா, தவுட்டுப்பாளையம் கிளைச் செய லாளர் எஸ்.செபாஸ்டியன், தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.விஜய ராகவன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன் ஆகியோர் கண்டன உரையற்றினர். முடிவில் மீனவர் கிளை எல்.சேகர் நன்றி கூறினார்.