districts

img

பணியிட மாறுதல்களில் முறைகேடு - டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

கோவை, மார்ச் 10-  டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணியிட மாறு தல் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை கண்டித்து சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணியிடமாறு தல்களில் சுழற்சி முறையை அமலாக்க வேண் டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். பணி வரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட சட்டப்படியான உரிமைகளை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் சிறப்புரையாற்றினார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறு முகம், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான்  அந்தோணி ராஜ், பொருளாளர், ராமகிருஷ் ணன் மற்றும் செந்தில் பிரபு, தங்கராஜ், விஜய ராகவன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  

ஈரோடு

ஈரோடு மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் துணைச் செயலாளர் ம.பெரியசாமி தலைமை வகித்தார். சம்மேளன குழு உறுப் பினர் வீ.ராஜேந்திரன், மாநில துணைத் தலை வர் பொன்.பாரதி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், மாவட்ட பொருளா ளர்  க.ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மகேந்தி ரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட  செயலாளர் சி.நாகராசன், மாவட்ட துணைத்  தலைவர் பி.ஆறுமுகம், டாஸ்மாக் சங்க  மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணைத் தலைவர் என்.ராக்கன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் சி.மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நிர் வாகி ராஜன் துவக்க உரையாற்றினார். மாநி லக்குழு உறுப்பினர் நவீன் சந்திரன், சங்கர லிங்கம், ஸ்டெர்லிங் பயோடெக் சங்க நிர்வாகி ராஜரத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில், பாலசுப்பிரமணி யன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளானோர் கலந்து கொண்டனர்.

கைமாறிய பணம் - முதல்வர் தலையிட கோரிக்கை

கோவையில் டாஸ்மாக் ஊழி யர் சங்க பொதுச்செய லாளர் திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டாஸ் மாக் மதுபான சில்லறை விற்பனை கடை களில் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு சொந்த ஊர்களுக்கு பணியிட மாற்றம்  வழங்க வேண்டும் என தொடர்ந்து டாஸ் மாக் ஊழியர்கள் சம்மேளனம் வலியு றுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றாத நிலையில்,  ஆட்சி மாற்றத் திற்கு பிறகு புதிதாக வந்துள்ள அமைச்சர் முறையான பணியிட மாற்றம் செய்யாமல் தன்னிச்சையாக நூற்றுக்கும்  மேற்பட்டோ ருக்கு பணியிட மாறுதல் வழங்கியிருக்கி றார். இந்த பணியிட மாற்றத்தில் பணம் பெருமளவு கைமாறியுள்ளது. இதன் மூலம் பெரும் முறைகேடு நடைபெற்றுள் ளது என நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.  குறிப்பாக, ஊழியர்கள் குடும்ப சூழல், உடல்நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்க ளால் பணியிட மாற்றத்துக்கு விண்ணப் பித்து வருகின்றனர். ஆனால், இந்த விண் ணப்பங்களை பரிசீலிக்காமல் தன்னிச்சை யாக பணியிட மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு முறைகேடாக செய்யப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் சுழற்சி முறை யிலான பணியிட மாற்றங்களை அமல் படுத்த வேண்டும். முறைகேடாக வழங்கப் பட்டுள்ள பணி மாறுதல்களை உடனடியாக  ரத்து செய்து நியாயமான கோரிக்கை அடிப் படையில் பணி மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும்.  மேலும், புதிய அரசு அமைந்தவுடன் குறிப்பாக தற்போதைய துறை சார்ந்த அமைச் சர் எங்களது கோரிக்கைகளை ஏற்க வில்லை. மதுக்கூடங்கள் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என அமைச்சர் கூறும் நிலையில், பார் உரிமையாளர்கள் அமைச் சர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் நிறுவனத் தில் அமைச்சரின் தலையீடு அதிகமாக இருக் கிறது.

இதை தமிழக முதல்வர் அனுமதிக்கக் கூடாது. இதேபோன்று ஆளுங்கட்சியின் தலையீடு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு  மதுபாட்டிலுக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என ஆளுங்கட்சியினர் நிர்பந்தம் செய்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி  பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார் கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத் தும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கி றோம்.  இதேபோன்று மதுக்கூட உரிமையாளர் கள் டாஸ்மாக் கடை நேரத்திற்குப் பிறகு பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி கள்ளச் சந்தையில் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பிரச்சனைக ளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட் டுக்கொள்கிறோம். மேலும், ஆட்சி மாற்றத் தால் டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன் முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட எங்க ளது கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர் பார்த்தோம்.

ஆனால் தற்போது வரை எதுவும் நடைபெறவில்லை. மதுக்கூடங்களை மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ள நிலையில், இதனை அமல்படுத்து வதற்கு மாறாக தமிழக அரசு டாஸ்மாக் நிர் வாகம் மேல்முறையீடு செய்து இருப்பதை ஏற்க முடியாது.  மதுக்கூடங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற அக்கறை இந்த அரசிற்கு இருந்தால் மதுக்கூடங்களை அகற்ற வேண்டும்.  மதுக்கடைகளையும் முழுமையாக மூட வேண்டும் என்பதே சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் நிலைப் பாடு. அதேநேரத்தில் இத்துறையில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு மாற்று பணிகள் வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கை கள் நிறைவேற்றாத பட்சத்தில் இதர சங்கங் களை இணைத்து தீவிரமான போராட்டத்தை சிஐடியு டாஸ்மாக் சம்மேளனம் முன்னெடுக் கும், என்றார்.