districts

img

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் தர்ணா

இளம்பிள்ளை, மே 4- முறையாக குடிநீர் விநியோகிக் கக்கோரி இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக் கள் காலிக்குடங்களுடன் முற்றுகை யிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். சேலம் மாவட்டம், இடங்கண சாலை நகராட்சி 2 ஆவது வார்டுக் குட்பட்ட தூதனூர், நாப்பாளையம் ஆகிய பகுதியில் கடந்த ஒரு மாத  காலமாக சீராக குடிநீர் விநியோகி கப்படவில்லை. இந்நிலையில், அப் பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் குடிநீர் கேட்டு  இடங்கணசாலை குடோன் பகுதி யில் உள்ள கிராம நிர்வாக அலுவல கம் முன்பு செவ்வாயன்று காலிக்கு டங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த  2 ஆவது வார்டு உறுப்பினர் மாதேஸ் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் கலந்து கொண் டார். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த இடங்கண சாலை  நகராட்சித் தலைவர் கமலக் கண்ணன், துணைத் தலைவர் தள பதி, ஆணையாளர் ரவிச்சந்திரன்,

கிராம நிர்வாக அலுவலர் கோபால், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் கூறுகையில், தூத னூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இப்பகு தியில்  உள்ள மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டிக்கு வரும் மெயின் குழா யில் முறைகேடாக சிலர் இணைப் புப் பெற்று மின்மோட்டார் வைத்து  தண்ணீரை எடுத்துக் கொள்வதால், எங்கள் குடிநீர் தேவைக்கு கூட கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரு வதில்லை. எனவே, இதுதொடர் பாக நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து அதிகாரிகள் கூறுகையில், முறைகேடான இணைப்பு போடப்பட்டு இருந்தால்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். தற்காலிகமாக ஏற்கனவே போடப்பட்டுள்ள குழாய்களில் இருந்து தண்ணீர் வழங்க நடவ டிக்கை  எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதையடுத்து அனைவ ரும் கலைந்து சென்றனர்.