districts

img

குறிவைத்து கொள்ளை - 4 பேர் கைது

கோவை, மார்ச் 13- வங்கிகள், நகைக் கடைகள் மற்றும் பண்ணை வீடுகளை  குறிவைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நால்வரை, போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம், சூலூர் அடுத்த செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவநாதன் மற்றும் நித்யானந்தி தம்பதியினர். கடந்த மாதம் 13 ஆம் தேதி நித்யானந்தி வீட்டில்  தனியாக இருந்த போது, பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 22 சவரன் தங்கம்  மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதைத்தொடர்ந்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராய ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் கிடைத்த தடயங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் கொள்ளையர்கள் வெளி  மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் உறுதி  செய்தனர். இதைத்தொடர்ந்து, கொள்ளையர்கள் வேலூர்  மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை  போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து, கோவை சூலூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், கொள்ளை யர்கள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்கிற மீசை அய்யனார், கர்நாடக மாநிலம்  தாவணிக்கர மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்கிற ராமு,  வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஏழுமலை  என்கிற ராஜா, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட் டையை சேர்ந்த ராமலிங்கம் என்கிற ராஜேஷ் என்பது தெரி யவந்தது.  மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், குழு வாகச் சென்று திருடும் இக்கொள்ளையர்கள் மீது கேரளா,  கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதும், வங்கி கள், நகை கடைகள் மற்றும் பண்ணை வீடுகளில் ஆட்கள்  இருக்கும் போதே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை யடித்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ள தும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கொள்ளையர்க ளிடமிருந்து  25 சவரன் தங்க நகைகளை மீட்ட போலீசார், கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்திய கார் ஒன்றை யும் பறிமுதல் செய்தனர். மேலும் நால்வரையும் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.