districts

img

டிராகன் பழம் சாகுபடிக்கு மானியம் தாராபுரம் தோட்டக்கலைத்துறை தகவல்

தாராபுரம், ஜூலை 15 – தமிழக விவசாயிகள் சமீபகாலமாக டிராகன் பழம் சாகுபடியில் மிகவும்  தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்ற னர். அதற்கு காரணம் குறைந்த செல வில் அதிக லாபம் ஈட்டலாம். இந்த  டிராகன் பழ சாகுபடி பரப்பை அதிகரிக் கும் வகையில், தமிழக அரசு தோட்டக் கலை துறையின் மூலம் விவசாயிக ளுக்கு மானியம் வழங்கப்படும் என  தோட்டக்கலை துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து தாராபுரம் வட்டாரத்  தோட்டக்கலை உதவி இயக்குநர் கூறு கையில், டிராகன் பழம் பார்ப்பதற்கு கள் ளிச்செடி போன்றே காணப்படும். இது  வெப்பமண்டல பயிராகும். இந்தப்பழம்  இரத்த சர்க்கரை அளவை கட்டுப்ப டுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப் பதுடன் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி மாரடைப்பு வருவதை தடுக்கவும் உத வுகிறது.

உடல் எடைய குறைக்க விரும் புவர்களுக்கு காலையில் சிற்றுண்டியா கவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் இந்தப் பழத்தை சாகுபடி செய்ய விவசாயிக ளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகி றது. இச்செடி களிமண் தவிர அனைத்து  மண் வகைகளிலும் வளரும் தன்மையு டையதால் செடிகள் படர பந்தல் அமைப்பு தேவைப்படுகிறது. இதற்கு அதிகளவு நீர் தேவை இல்லை. சொட்டு  நீ அமைத்து சாகுபடி செய்யும் போது  களை எடுக்கும் செலவு குறைவதுடன், அதிக மகசூல் கிடைக்கும். சொட்டு  நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயி களுக்கு 100 சதவிகிதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது, செடி கள் நடவு செய்து ஒன்றரை வருடத்தில்  மகசூல் கிடைக்கும். முதல் வருடம் 1  முதல் 1.5 டன்னும், இரண்டாம் வருடம் 4  முதல் 5 டன்னும், மூன்றாம் ஆண்டி லிருந்து 8 முதல் 10 டன்கள் பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 250 கிராம் முதல்  350 கிராம் வரை இருக்கும். தற்சமயம்  ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய் வரை  விற்கப்படுகிறது. இந்த சாகுபடி மூலம்  ஒரு ஏக்கருக்கு 5 முதல் 6 லட்சம் வரை  வருமானம் கிடைக்கும். இதற்கு மானி யமாக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.95 ஆயிரம்  வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம்  பயனடைய விரும்பும் விவசாயிகள் தாராபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை 63813 95756, 99762  67323 ஆகிய எண்களில் தொடர்பு கொள் ளுமாறு கூறினார்.