தாராபுரம், நவ.18- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டு முடிவின்படி ஸ்தபான விரிவாக்கம் அமைப்பு விதியின் படி அலுவலக வளாக கிளை அமைக்க வேண்டும் என்ற தீர்மா னத்தின் அடிப்படையில் தாராபுரம் வட்டக்கிளையில் தமிழ் நாடு தொழிற் பயிற்சி துறை அலுவலக மையக்கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அலுவலக வளாக கிளை நிர்வாகிகளாக ஆர்.ராமசாமி, ஆர்.சீனிவாசன், கே.பழ னிச்சாமி, ஆர்.குருசாமி, ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து நெடுஞ்சாலை துறை அலுவலக வளா கத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியா ளர் அலுவலகம், உதவிக் கோட்ட பொறியாளர் அலுவலகம், தரக் கட்டுப்பாட்டு அலுவலகம், உதவிக் கோட்ட பொறியா ளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் சேர்த்து வளாக கிளை துவங்கப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகளாக எம். கார்த்திகேயன், சி.பஞ்சலிங்கம், சி.சிவக்குமார், ப.செந்தில் குமார் மா.மாசாணம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கிளை அமைப்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், மாவட்ட இணை செயலாளர் மு.மேகலிங்கம், வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார், வட்டக்கிளை செயலாளர் இல.தில்லை யப்பன் மற்றும் நிர்வாகிகள் எஸ்.சிவராசு, வீ.தங்கவேல், எஸ். சுமதி, சி.சிவக்குமார் உள்ளிட்ட சங்கத்தினர் கலந்து கொண்ட னர்.