திருப்பூர், மே 5- ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு, சென்னி மலை சாலை, கொளத்தோட் டம் அரசன்காடு பகுதியில் தார் சாலை பணி நடை பெற்று வருகிறது. கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் நான்கு வீதிகள் 575 மீட்டர் நீளத்தில், 4.30 மீட்டர் அகலத்தில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் மிக உயர்ந்த தரத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் இறுதிகட்ட தார்சாலை பணிகள் செவ்வாயன்று நடைபெற்றதை 7ஆவது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி குமார் நேரில் ஆய்வு செய்து, தரம் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதே பகுதியில் மீதமுள்ள இரண்டு மண் சாலை பணிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அரசி டம் உரிய நிதி ஒதுக்கீடு பெற்று நிறைவேற்றி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.