districts

img

தமுஎகச நினைவேந்தல் கூட்டம்

நாமக்கல், ஜூலை 4- மறைந்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி மற்றும் திரைக் கலைஞர் பூ ராமு ஆகியோருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நினைவேந் தல் கூட்டம் நடைபெற்றது.  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள சத்யாநகரில், தமுஎகச சார்பில், மறைந்த எழுத்தாளர் கு.சின் னப்ப பாரதி மற்றும் திரைக்கலைஞர் பூ ராமு ஆகியோர்  நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங் கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர்.ரமேஷ் தலைமை வகித் தார். இதில், மாவட்ட தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட உத விச்செயலாளர் எஸ்.மாதவி மற்றும் தெருக்கூத்து கலைஞர் கள் பலர் கலந்து கொண்டு, மறைந்த கலைஞர்களின் உருவப் படத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சேலம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஸ்தாபக தலைவரும், இடதுசாரி மற்றும் முற்போக்கு எழுத் தாளருமான கு.சின்னப்ப பாரதி நினைவேந்தல் நிகழ்வு சேலம் தமுஎகச மாவட்டக்குழு சார்பில் சேலம் சுனில் மித்ரா  நினைவரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.வசந்தி தலைமை வகித்தார். பாலம் தி புக் மீட் நிறுவனரும், எழுத்தாளருமான சகஸ்ரநாமம், மாவட்ட செயலாளர் ஜி.கண்ணன், மாவட்ட பொருளாளர் சேக்  அப்துல்லா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இல.வின்சென்ட் ஆகியோர் மறைந்த கு.சி,பா-விற்கு புகழ் அஞ்சலி செலுத்தி னர்.

;