districts

img

உடுமலை நாராயணகவிக்கு தமுஎகச நிர்வாகிகள் மரியாதை

திருப்பூர், மே 24- பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயண கவி நினைவு நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தினர் அவரது உருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். உடுமலையில் உள்ள நாராயண கவி நினைவு மண்ட பத்தில் திங்களன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் சுதா சுப்பிரமணியம், செயலா ளர் பாடகர் துரையரசன், மாவட்ட உதவி செயலாளர் தோழன் ராசா மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் மண்ணீரல் செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.