நாமக்கல், பிப்.26- பள்ளிபாளையம் அடுத்துள்ள பாப்பம்பாளையம் பகுதி யில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம் பள்ளி பாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் கிளை கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சண்முகம் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தாலுகா செயலாளர் கே.அருண்குமார், மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், கிளைத் தலைவர் சுப்பிரமணி, கிளைப் பொருளாளர் குணபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பினர் பதிவு சேர்ப்பில் 42 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பதிவு அட்டை வழங்கப் பட்டது. இதேபோன்று, பாப்பம்பாளையம் கிராமத்தில் நடை பெற்ற புதிய கிளை அமைப்பு கூட்டத்திற்கு, தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சங்க உதவி செயலாளர்கள் சண்முகசுந்தரம், சரவணன், மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், புதிய கிளைத் தலைவராக தனலட்சுமி, கிளைச் செயலா ளராக விமலா, கிளை பொருளாளராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.