தருமபுரி, பிப்.15- வீட்டுமனைபட்டா கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் சங்கத் தின் சார்பில் அரூர் கோட்டாட் சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் சொந்த வீடு இல்லாமல் உள்ளனர். ஏழ்மை யில் உள்ள இவர்கள் அடுத்தவர்களை சார்ந்து வாழவேண்டியுள்ளது. எனவே இவர் களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு வீடுகட்டி தரவேண்டும். குடும்ப அட் டையை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாக மாற்றித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்ட செயலாளர் கே.காந்தி தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் எம்.மாரி முத்து, பொருளாளர் தமிழ்செல்வி மற்றும் சபனா ஆகியோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். இதனையடுத்து, கோட் டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.