திருப்பூர், ஏப்.30- திருப்பூர் மாவட்டம், அமராவதி சர்க்கரை ஆலையில் முழு அரவை தொடங்க வேண் டும், அங்கிருந்த மூன்று அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால் மாற்றுப் பணியில் அதிகாரிகளை நியமித்து ஆலை இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி னர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டம் சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் பாலதண்ட பாணி பங்கேற்று பேசுகையில் கூறியதா வது, அமராவதி சர்க்கரை ஆலை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 3300 ஏக்கர் கரும்பு பயிரி டப்பட்டு உள்ளது. அதிகளவு சர்க்கரைத் திற னுடன் கரும்புகள் ஆலைக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் உள்ளன. 65 ஆயிரம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய முடி யும். ஆனால், நாளொன்றுக்கு 1000 டன் கரும்பு அரவைக்கு பதிலாக 300, 400 டன் என்ற அளவில் இந்த ஆலை இயக்கப் பட்டு வருகிறது. கரும்பு வந்தால்தான் இந்த ஆலை இயங் கக் கூடியதாகும். இங்கு மொத்தம் 78 பேருக்கு மிகக் குறைவாக 4 பேர்தான் வேலை செய்யும் நிலை உள்ளது. 6 பேர் ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். இதில் இங்கி ருந்த 3 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுச் சென்று விட்டனர். இதனால் இந்த தாலுகா விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். இந்த ஆலை முழு அரவையுடன் இயங்க வேண்டும், அதற்கு மாற்றுப் பணியில் அதி காரிகளை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், இது பற்றி சர்க்கரை ஆணைய ரிடம் பேசுவதாகவும், பதவி உயர்வு பெற் றுச் சென்றவர்களை இங்கு வரவழைக்க முடியுமா? என தெரியவில்லை. வேறு அதி காரிகளை இங்கு பணியில் அமர்த்த சர்க் கரை ஆணையரிடம் கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரி வித்தார். இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார், காங்கயம் வட்டம் ஆலாம்பாடி கிரா மத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ராதாமணி நிலத்துக்கு பிஏபி தண்ணீர் பாய்ச்ச விடா மல் அருகாமையில் உள்ள வசதி படைத்த ஒருவர் அரளி வாய்க்காலை அடைத்து வைத்திருப்பதாகவும், போராட்டத்துக்குப் பிறகு தற்காலிகமாக தற்போது தண்ணீர் விடப்பட்டது. எனினும் நிரந்தரமாக இந்த வாய்க்காலை பயன்படுத்த வட்டாட்சியர் மூலம் உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட பெண் விவசாயி ராதாமணியும் அப்போது அங்கு வந்திருந்தார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித் துறையினர் தற்போது தண்ணீர் விட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினர். ஆனால் நிரந்தரமாக அந்த வாய்க் காலை ராதாமணி பயன்படுத்த வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங் கத்தினர் மீண்டும் வலியுறுத்தினர். இதற்கு கோட்டாட்சியர் அளவில்தான் உத்தரவிட முடியும் என நினைப்பதாக ஆட்சியர் வினீத் கூறினார். எனினும் இதைப் பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித் துறையினர் கூறினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார் தொடர்ந்து பேசுகையில், கொடியம்பாளையம், செங்கப்பள்ளி சாலைகளில் அவிநாசி - அத்திக்கடவு திட் டம் மற்றும் திருப்பூர் குடிநீர் திட்டப் பணி களுக்கு சாலைகளைத் தோண்டி குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சாலை களை சரியாக செப்பனிடாமல் விட்டு விட்ட னர். முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலைக ளைச் செப்பனிட வேண்டும் என்று வலியுறுத் தினார். மேலும் அண்மையில் தெரு நாய்கள் கடித்து ஒரு விவசாயியின் 9 ஆடுகள் உயிரி ழந்ததால் அவரது ஒட்டுமொத்த வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் கேட்டுக் கொண்டார்.