ஈரோடு, செப்.15- பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.36.06 கொடியை உடனே வழங்க வேண்டுமென தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சத்தியமங்கலம் பண் ணாரி சர்க்கரை ஆலை கிளை தலை வர் ஏ.ஆர்.சுப்பையன் தலைமையில் நிர்வாகிகள் பண்ணாரி அம்மன் சர்க் கரை ஆலையின் பொது மேலாளரி டம் மனு கொடுத்தனர். அதில், ஆலை தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற் போது வரை தொடர்ந்து விவசாயிகள் கரும்பு வழங்கி வருகின்றனர். இந் நிலையில் கடந்த 2013-14 முதல் 2016-17 வரையிலான சீசனில் தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலையை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் வழங்கியுள்ளது. ஆனால் பண்ணாரி அம்மன் ஆலையில் வழங்க வேண்டிய பாக்கித் தொகையை வழங்கவில்லை.
எனவே அந்த பாக் கித் தொகை ரூ.36.06 கோடியை விவ சாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி லாபத்தில் பங்கு தொகையை 1966 கரும்பு கட் டுப்பாடு சட்டம் 3ன்படி 5ஏ பங்குத் தொகை தங்கள் ஆலையில் வழங் கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனையும் உடனடியாக வழங்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட கரும் பினை ஆலை வளாகத்திற்குள் வந்த வுடன் எடை போட வேண்டும். ஆனால் ஓரிரு நாட்கள் காலதாமதப்படுத்தப் படுகிறது. இதனால் விவசாயிக ளுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்து டன் பண்ணாரி அம்மன் ஆலை தொடங்கப்பட்டபின் அதன் இணை நிறுவனங்களாக கல்வி நிறுவனங் கள் தொடங்கி செயல்பட்டு வருகி றது. இதில் கரும்பு விவசாயிகளுக் கும் பங்கு உண்டு. அந்தவகையில் கல்வி நிறுவனங்களில் கரும்பு விவ சாயிகளின் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பி லும் கரும்பு விவசாயிகளின் குடும் பத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட மேலாளர் 5ஏ பாக்கித் தொகை குறித்து நிர்வாக இயக்கு நர் கவனத்திற்கு கொண்டு செல்வ தாக உறுதி அளித்துள்ளார். இம்ம னுவை அளிக்கையில் சங்கத்தின் செயலாளர் எஸ்.முத்துசாமி, நிர்வாகி கள் கே.என்.சுப்பிரமணி, பி.ஆர்.இளங்கோ, கே.எம்.சதிஷ்ராஜ், எஸ். வேலுச்சாமி, ஈஸ்வரன் மற்றும் முக் கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.