கோவை, ஆக. 25- சந்திரயான் மூன்று திட்டங் களிலும் திட்ட இயக்குநர்கள் தமிழர்கள் என்பதும், அவர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்பதும் நமக்கு பெருமை, கல்வியோடு உணவை ஊட்டி விடுகிற திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கிவைத்திருப்பதன் மூலம், மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும், எதிர்காலத்தில் அறிவியல்துறையை தமிழக மாண வர்கள் ஆள்வார்கள் என பி.ஆர்.நட ராஜன் எம்பி., நம்பிக்கை தெரிவித் தார். தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட் டத்தை தமிழக முதல்வர் வெள்ளி யன்று திருக்குவளையில் துவக்கி வைத்தார். இதே நேரத்தில் தமிழ கத்தின் அனைத்து அரசுப்பள்ளி களிலும் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன்ஒருபகுதி யாக, கோவை, சூலூர் தாலுகா விற்குட்பட்ட இருகூர் பேரூ ராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று பள்ளி குழந் தைகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறி திட்டத்தை துவக்கி வைத் தார். இதனைத்தொடர்ந்து, இருகூர் பேரூராட்சி தலைவர் ஆ.சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழா வில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.கீதாஞ்சலி வரவேற்புரையாற் றினார். பி.ஆர்.நடராஜன் எம்பி., சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காலை உணவு திட்டம் மாபெரும் வெற்றி பெறும். இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் ஊட்டச்சத்து பெறுவார்கள். கல்வித்திறன் மேம்படும், பொதுக் கல்வியை பலப்படுத்த இத்திட்டம் உதவி செய்யும். இன்று சந்தி ராயன் 3 வெற்றியை நாடே கொண் டாடுகிறது . இந்த மூன்று திட்டங் களிலும் திட்ட இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அதை விட முக்கியமானது அந்த மூன்று திட்ட இயக்குநர்களும் அரசு பள்ளி களில் படித்தவர்கள் என்பது நமக்கு பெருமை. எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த திட்டத்திற்கு கூடுதல் முக்கியத் துவம் அளிக்கின்றார். தனது கனவு திட்டமாக இதை இவர் முன்னி றுத்துகின்றார். ஏற்கனவே தமிழ் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் பல்வேறு சமுக நலத்திட் டங்களை போலவே, முதலமைச் சர் அவர்களின் முத்தாய்ப்பான இந்த திட்டமும் முழு வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டார்.
துவக்க விழா நிகழ்வில் சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவ காமி, சூலூர் வட்டார கல்வி அலு வலர் தமிழ்ச் செல்வி, இருகூர் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி. ஜெயக்குமார், இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், முருகசாமி, ஆனந்தன், இருகூர் பேரூராட்சி செயல் அலு வலர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கிணத்துக்கடவு பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டத்தில் முத்துக்காளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். சேலத்தில் ஆட்சியர் செ. கார்மேகம், தருமபுரியில் ஆட்சியர் கி.சாந்தி, ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜகோபால் சுன்காரா, உதகையில் ஆட்சியர் சா.ப.அம்ரீத் ஆகியோர் காலை உணவு திட்டத் தினை துவக்கி வைத்தனர்.